பதிவு செய்த நாள்
15
அக்
2019
16:10
இந்த மாதம் செவ்வாய் நவ.12 வரையும், குரு, சுக்கிரன் அக்.28க்கு பிறகும் சாதகமாக இருக்கின்றனர். இதனால் முயற்சியில் வெற்றி காணலாம். பிள்ளைகளின் செயல்பாடு பெருமையளிக்கும். பொருளாதார வளம் கூடும். இதுவரை இருந்த மந்த நிலை மறையும். மனதில் துணிச்சல் பிறக்கும். பண வரவால் குடும்பத் தேவைகள் நிறைவேறும். பெண்களால் நன்மை கிடைக்கும். அவர்களால் பொன், பொருள் சேரும். பகைவர் சதி எடுபடாது. அவர்கள் சரணடையும் நிலை ஏற்படும். ராகுவால் உறவினர் வகையில் கருத்து வேறுபாடு ஏற்படும். சிலர் ஊர் விட்டு ஊர் செல்லும் நிலை உருவாகலாம். கடந்த மாதம் சூரியனால் ஏற்பட்ட அவப்பெயர், அலைச்சல்,சோர்வு மறையும்.
பெண்கள் அக்.28க்கு பிறகு சிறப்பான நிலையில் இருப்பர். கணவரின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். விருந்து விழா என அடிக்கடி செல்வர். சகோதரவழியில் ஆதரவு கிடைக்கும். நவ.12க்கு பிறகு உடல் நலனில் அக்கறை தேவை.
சிறப்பான பலன்கள்
தொழிலதிபர்கள் அக்.28க்கு பிறகு வளர்ச்சி காண்பர். பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் முன்னேற்றம் பெறும்.
வியாபாரிகளுக்கு அக்.28க்கு பிறகு எதிர்பார்த்ததை விட வருமானம் அதிகரிக்கும்.
தனியார் துறையில் பணிபுரிபவர்களுக்கு மாத பிற்பகுதியில் சக ஊழியர்கள் ஆதரவுடன் இருப்பர்.
ஐ.டி.,துறையினருக்கு அக்.28க்கு பிறகு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.
மருத்துவர்கள் நவ.12க்குள் புதிய வாகனம் வாங்க யோகமுண்டு.
ஆசிரியர்களுக்கு அக்.28க்கு பிறகு புதிய பதவி தேடி வரும்.சக ஆசிரியர்களின் மத்தியில் செல்வாக்கு கூடும்.
போலீஸ், ராணுவத்தில் பணிபுரிபவர்களுக்கு வளர்ச்சி காத்திருக்கிறது. கோரிக்கைகளை நவ.12க்குள் கேட்டு பெறலாம். தரகு,கமிஷன் தொழிலில் மாத பிற்பகுதியில் எதிர்பாராத வகையில் வருமானம் வரும்.
அரசியல்வாதிகள் மக்கள் மத்தியில் நற்பெயர் கிடைக்கும்.
கலைஞர்கள் அக்.28க்கு பிறகு புதிய ஒப்பந்தம் மூலம் பணம், புகழ் கிடைக்க பெறுவர்.
விவசாயிகளுக்கு புதிய சொத்து வாங்கும் எண்ணம் நவ.12க்குள் கைகூடும். நிலப்பிரச்னை மறையும்.
மாணவர்கள் அக். 28க்கு பிறகு கல்வியில் சிறப்பர். ஆசிரியர்களிடம் நற்பெயர் கிடைக்கும்.
சுமாரான பலன்கள்
தொழிலதிபர்கள் சிலர் அரசின் மூலம் பிரச்னைகளை சந்திக்க நேரிடலாம்.
வியாபாரிகள் பகைவர் தொல்லை, மறைமுகப்போட்டிக்கு ஆளாகலாம். அரசு வகையில் அனுகூலமான போக்கு காணப்படவில்லை. வரவு, செலவு கணக்கை சரியாக வைக்கவும்.
அரசு பணியாளர்கள் பணிச்சுமையால் கூடுதல் நேரம் பணிபுரிவர்.
தனியார் துறையில் பணிபுரிபவர்களுக்கு பணி, இடமாற்றம் ஏற்பட வாய்ப்புண்டு. நெருப்பு, மின்சாரம் தொடர்பான பணியாளர்கள் விழிப்புடன் செயல்படவும்.
வக்கீல்களுக்கு வழக்கு, விவகாரங்களில் எதிர்பார்ப்பு நிறைவேறாது. முடிவு சுமாராக இருக்கும்.
மருத்துவர்கள் வெளியூர் பயணத்தால் உடல்நலக்குறைவுக்கு ஆளாகலாம்.
ஆசிரியர்கள் அக். 28 வரை வேலையில் நிதானம் தேவை. முக்கிய பொறுப்புகளை தட்டிக் கழிக்காமல் செய்யவும்.
போலீஸ், ராணுவத்தினர் நவ.12க்கு பிறகு அதிகாரிகளின் அடக்குமுறைக்கு ஆளாகலாம்.
அரசியல்வாதிகள் நவ.12க்கு பிறகு மனக்குழப்பத்திற்கு ஆளாகலாம். பலனை எதிர்பார்க்காமல் உழைக்க நேரிடும்.
விவசாயிகள் பாசிப்பயறு, கருப்பு நிற தானியங்கள் பயிரிடுவதை தவிர்கவும். கால்நடை வளர்ப்பும் சுமாராக இருக்கும்.
பள்ளி மாணவர்களுக்கு புதன் சாதகமற்று இருப்பதால் போட்டியில் வெற்றி பெற விடாமுயற்சி தேவைப்படும்.
* நல்ல நாள்: அக்.18,24, 25,26,27,30,31, நவ.3,4,5,11, 12,13,14,15
* கவன நாள்: அக்.19,20, நவ.16 சந்திராஷ்டமம்
* அதிர்ஷ்ட எண்: 3,5
* நிறம்: சிவப்பு, வெள்ளை
* பரிகாரம்
● சனிக்கிழமையில் பெருமாள் தரிசனம்
● பிரதோஷத்தன்று நந்தீஸ்வரர் வழிபாடு
● வெள்ளியன்று பசுவுக்கு கீரை, பழங்கள்