பதிவு செய்த நாள்
16
செப்
2019
15:25
செவ்வாயால் கிடைக்கும் நற்பலன்கள் இந்த மாதம் பிற்பகுதியில் சற்று குறையலாம். அதற்காக கவலை கொள்ள வேண்டாம். காரணம் புதன் செப்.25க்கு பிறகும் சுக்கிரன் அக்.5க்கு பிறகும் நற்பலன் கொடுப்பர். அதோடு குருவால் நன்மைகள் தொடரும். மனதில் உற்சாகம் பிறக்கும். நினைத்த செயலை வெற்றிகரமாக செய்து முடிக்கலாம். பணப்புழக்கம் அதிகரிக்கும். தேவைகள் பூர்த்தியாகும். உங்களை புரிந்து கொள்ளாமல் இருந்தவர்கள் உங்களின் மேன்மை அறிந்து சரணடையும் நிலை வரலாம். குருவின் 9-ம் இடத்துப் பார்வையால் சுப நிகழ்ச்சி நடந்தேறும். செவ்வாயால் பொருளாதார வளம் பெருகும். உங்களுக்கு அபார ஆற்றல் பிறக்கும். ஆடை, ஆபரணம் வாங்குவீர்கள்.
புதிய வீடு, மனை, வாகனம் வாங்கலாம். புதனால் செப்.25 வரை குடும்பத்தில் குழப்பம் நிலவும். கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு வரலாம். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்கவும். அதன் பிறகு குடும்பத்தில் இருந்த பின்னடைவு மறையும். தம்பதியிடையே ஒற்றுமை மேம்படும். பிள்ளைகளால் மகிழ்ச்சியும், பெருமையும் கிடைக்கும். அக்.12,13,14ல் பெண்கள் உதவிகரமாக செயல்படுவர். உறவினர் வகையில் செப்.22,23ல் மனக்கசப்பு வரலாம். சற்று ஒதுங்கி இருப்பது நல்லது. அதே நேரம் அக்.7,8,9ல் உறவினர் வருகையும், அவர்களால் நன்மையும் கிடைக்கும். சுக்கிரனால் அக்.5க்கு பிறகு ஆடம்பர வசதிகள் பெருகும். சகோதரிகள் ஆதரவுடன் செயல்படுவர்.
தனியார் துறையில் பணிபுரிபவர்கள் செப்.25க்கு பிறகு புதனால் பதவி உயர்வு காண்பர். பணியிடத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். சக ஊழியர்கள் ஒத்துழைப்பர். விண்ணப்பித்த கோரிக்கை படிப்படியாக நிறைவேறும். பாதுகாப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பர். செப்.27க்கு பின் நன்மை ஏற்படாவிட்டாலும் பாதகமான பலன் நடக்காது. சற்று வேலைப்பளு இருக்கும். அக்.5,6 சிறப்பான நாட்களாக அமையும்.
வியாபாரிகள் சீரான வளர்ச்சி காண்பர். ஆனால் அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். நமக்கு ஏது எதிரி என அசட்டையாக இருந்து விடாதீர்கள்.
மறைமுக எதிரிகளால் அவ்வப்போது இடையூறு வரலாம். எனவே அவர்கள் பக்கம் ஒரு கண் இருப்பது நல்லது. எது எப்படியானாலும் பணவரவு திருப்திகரமாக இருக்கும். செப்.26,27ல் அதிர்ஷ்டவசமாக வருமானம் வரும். செப்.18,19, அக்.10,11,15,16ல் சிறு தடைகள் ஏற்படலாம். செப்.25 க்கு பிறகு வியாபாரிகள் நல்ல முன்னேற்றம் காண்பர். பெண்களை பங்குதாரராக கொண்ட தொழில் வளர்ச்சி பெறும்.
கலைஞர்களுக்கு பெண்கள் வகையில் இருந்த பிரச்னை அக்.5க்கு பிறகு மறையும். அதன் பின் அதே பெண்கள் தவறை உணர்ந்து உங்களுக்கு உதவிகரமாக இருப்பர். அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்கள் சிறப்பான வளர்ச்சி காண்பர். செப்.24,25ல் குழப்பம் ஏற்படலாம். செப்.26க்கு பிறகு விடாமுயற்சி எடுத்தால் தான் பதவி கிடைக்கும். சனிபகவானால் சிலர் பொல்லாப்பை சந்திக்க நேரிடலாம். போட்டியாளர்கள் வகையில் இடையூறு குறுக்கிடலாம்.
மாணவர்களுக்கு செப்.25 வரை படிப்பில் கவனம் தேவை. அதன் பின் கல்வியில் சிறந்து விளங்குவர். போட்டிகளில் வெற்றி காண்பர்.
விவசாயத்தை பொறுத்த வரையில் வருமானத்திற்கு குறைவிருக்காது. கீரை வகைகள், காய்கறிகள், பயறு வகைகள் போன்றவை நல்ல மகசூலைக் கொடுக்கும்.
பெண்களால் குடும்பத்தில் அமைதி நிலவும். சுப நிகழ்ச்சிகள் கை கூடி வரும். செப்.28,29ல் விருந்து, விழா என சென்று வருவீர்கள். சகோதரிகள் ஆதரவுடன் செயல்படுவர். செப்.20,21, அக்.17ல் புத்தாடை, அணிகலன்கள் வாங்கலாம். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு புதிய பதவி தேடி வரும்.
* நல்ல நாள்: செப்.20,21, 26,27,28,29, அக்.5,6,7, 8,9,12,13,14,17
* கவன நாள்: செப்.30, அக்.1,2 சந்திராஷ்டமம்
* அதிர்ஷ்ட எண்: 2,3
* நிறம்:மஞ்சள், பச்சை
பரிகாரம்:
● சங்கடஹர சதுர்த்தியன்று விநாயகர் வழிபாடு
● தினமும் காலையில் நீராடி சூரிய நமஸ்காரம்
● சுவாதியன்று லட்சுமி நரசிம்மருக்கு நெய்தீபம்