பதிவு செய்த நாள்
16
செப்
2019
15:14
இந்த மாதம் சுக்கிரன் அக்.5ல் இடம் மாறினாலும் மாதம் முழுவதும் நற்பலன் கொடுப்பார். அதோடு குரு, சனி, கேது மற்றும் சூரியனால் நற்பலன்கள் கிடைக்கும். புதன் செப்.25 க்கு பிறகும், செவ்வாய் செப்.26 க்கு பிறகும் சாதகமான இடத்துக்கு மாறுகின்றனர். எடுத்த செயலை வெற்றிகரமாக முடிக்கலாம். கடந்த மாதம் சூரியனால் ஏற்பட்ட பண விரயம் மறையும். அவரால் செல்வாக்கு அதிகரிக்கும். பொருளாதார வளம் மேம்படும். புதனால் ஏற்பட்ட அவப்பெயர் செப்.25க்கு பிறகு மறையும். செவ்வாயால் மனதில் பக்தி எண்ணம் அதிகரிக்கும்.
குரு பகவான் குடும்பத்தில் குதூகலத்தை கொடுப்பார். சுப நிகழ்ச்சிகளை நடத்தி வைப்பார். சகோதரிகளால் மேன்மை கிடைக்கும். செப். 25 க்கு பிறகு தம்பதியிடையே அன்பு பெருகும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். ஆடை, ஆபரணம் வாங்கலாம். புதிய வீடு, வாகனம் வாங்க யோகம் கூடி வரும். குடும்பத்தோடு புனித தலங்களுக்கு சுற்றுலா வருவீர்கள். செப்.24,25ல் பெண்கள் மிகவும் உறுதுணையாக செயல்படுவர். செப்.20,21, அக்.17 ல் உறவினர் வருகையும், அவர்களால் நன்மையும் கிடைக்கும். ஆனால் செப்.30, அக்.1,2ல் அவர்கள் வகையில் மனக்கசப்பு வர வாய்ப்புண்டு.
பணியாளர்களுக்கு புதன் சாதகமற்ற இடத்தில் இருப்பதால் அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். அரசு வேலையில் இருப்பவர்கள் அதிக அக்கறையுடன் இருக்கவும். ஆனால் செப்.25க்கு பிறகு உங்கள் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும். அதற்குரிய வருமானம் கிடைக்கும். அரசு ஊழியர்கள் நல்ல முன்னேற்றம் காண்பர். தனியார் துறையில் வேலை பார்ப்பவர்களுக்கு புதிய பதவி தேடி வரும். பாதுகாப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் சிறப்பான முன்னேற்றத்தை காணலாம். கோரிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேறும். செப்.18,19, அக்.15,16 ல் எதிர்பாராத நன்மை கிடைக்கும். பணியிடத்தில் அதிகாரம் கொடி கட்டி பறக்கும். முக்கிய கோரிக்கைகளை அப்போது வைக்கலாம்.
வியாபாரத்தில் சூரியனால் லாபம் சிறப்பாக இருக்கும். புதனால் ஏற்பட்ட பகைவர் தொல்லை, அரசு வகையில் இருந்த அனுகூலமற்ற போக்கு முதலியன செப்.25க்கு பிறகு மறையும். அதுவரை வரவு, செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும். வணிகத்தை விரிவுபடுத்தலாம். கூட்டாளிகளிடையே ஒற்றுமை ஏற்படும். ஆன்மிக சம்பந்தப்பட்ட மற்றும் பூஜை பொருள் வியாபாரம் செய்பவர்கள் அதிக லாபத்தை பெறுவர். அக்.5,6ல் எதிர்பாராத வகையில் பணவரவுக்கு வாய்ப்பிருக்கிறது. செப்.22,23,26,27 ல் பண விரயம் ஏற்படலாம். முயற்சியில் தடைகள் வரலாம்.
மாணவர்கள் மாத முற்பகுதியில் சிரத்தை எடுத்து படிக்க வேண்டியதிருக்கும். ஆசிரியர்களின் அறிவுரை கைகொடுக்கும். செப்.25க்கு பிறகு புதன் சாதகமாக இருப்பதால் போட்டிகளில் வெற்றி கிடைக்கும். கல்விக்கடன், ஸ்காலர்ஷிப் போன்றவை கிடைக்கும். நண்பர்களின் ஒத்துழைப்பும் உண்டு.
கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். தட்டிப்பறிக்கப்பட்ட புகழ், பாராட்டு கிடைக்கும். அரசிடம் இருந்து விருது, பாராட்டு போன்றவை வந்து சேரும். அரசியல்வாதிகள் செப்.25க்கு பிறகு புதிய பதவியோடு வருமானத்தையும் காணலாம். சமூகநலசேவகர்கள் திருப்திகரமாக பணியில் ஈடுபடுவர்.
விவசாயிகள் பாசிப்பயறு, நெல், கோதுமை, சோளம், மஞ்சள், தக்காளி, பழவகைகள் மூலம் அதிக வருமானம் வரும். செப்.25க்கு பிறகு கால்நடைச்செல்வம் பெருகும். பக்கத்து நிலத்துக்காரர்கள் வகையில் இருந்த தொல்லை மறையும். அவர்கள் உங்களுக்கு உதவிகரமாக இருப்பர். புதிய சொத்து வாங்க தருணம் வந்து விட்டது. வழக்கு, விவகாரத்தில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும்.
பெண்களுக்கு அபார ஆற்றல் பிறக்கும். குடும்பத்தாரிடம் நன்மதிப்பை பெறுவர். சுயதொழில் புரியும் பெண்களுக்கு வங்கிக் கடன் எளிதாக கிடைக்கும். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு பொறுமை தேவைப்படும். செப்.25க்கு பிறகு மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். அண்டை வீட்டாரிடம் சுமூக நிலை ஏற்படும். புதிய பதவியும் தேடி வரும். குடும்பத்தோடு புனித தலங்களுக்கு செல்வீர்கள். செப்.28,29ல் புத்தாடை, ஆபரணம் வாங்கலாம். பெற்றோர் வீட்டில் இருந்து பொருட்கள் வரப் பெறலாம். சகோதரிகளால் பண உதவி கிடைக்கும். உடல்நிலை திருப்தியளிக்கும்.
* நல்ல நாள்: செப்.18,19, 20,21,24,25,28,29 அக்.5,6,7,8,9,15,16,17
* கவன நாள்: அக்.10,11 சந்திராஷ்டமம்
* அதிர்ஷ்ட எண்: 1,3,9
* நிறம்: வெள்ளை, மஞ்சள்
பரிகாரம்
● செவ்வாயன்று முருகனுக்கு நெய் தீபம்
● புதன்கிழமையன்று குலதெய்வ வழிபாடு
● திங்கட்கிழமையன்று சிவாலய தரிசனம்