கும்பம்: (அவிட்டம் 3,4, சதயம், பூரட்டாதி 1,2,3) அந்தஸ்து
பதிவு செய்த நாள்
15
ஜூலை 2019 16:48
சூரியன், கேது, சனி மாதம் முழுவதும் நன்மை தருவார்கள். சுக்கிரன் ஜூலை 24 வரை நற்பயன் அளிப்பார். செவ்வாய் ஆக.10 வரையும், புதன் ஆக.2 க்கு பிறகும் சாதக பலன் கொடுப்பார்கள். இதனால் எதிர்பார்ப்பு நிறைவேறும். கடந்த கால பிரச்னைகளுக்கு தீர்வு ஏற்படும். வாழ்வில் சிறப்பான முன்னேற்றம் காண்பீர்கள்.
சூரியனால் பகைவரை வெற்றி கொள்வீர்கள். பொருளாதார வளம் பெருகும். சமூகத்தில் அந்தஸ்து உயரும். செவ்வாயால் அபார ஆற்றல் பிறக்கும். ஆடை, ஆபரணங்கள் வாங்கலாம். புதன் ஆக.2க்கு பிறகு சாதக பலனைக் கொடுப்பார். இதனால் எடுத்த முயற்சியில் வெற்றி கிடைக்கும். இழுபறி நீடித்த சுபவிஷயங்களில் நல்ல முடிவு கிடைக்கும். கணவன், மனைவி இடையே இணக்கமான சூழலால் ஒற்றுமை மேலோங்கும். குடும்பத்தில் பெரியோர் ஆதரவும், ஆலோசனையும் கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக செயல்படுவர். தொழிலில் லாபம் அதிகரிக்கும். மனதில் பக்தி உயர்வு மேம்படும். பொன், பொருள் சேரும். மகிழ்ச்சி நிலைக்கும். பெண்கள் உறுதுணையாக இருப்பர். குறிப்பாக ஜூலை 17,18,19, ஆக.14,15ல் பெண்களால் பண உதவி கிடைக்கும். விருந்து, விழா என சென்று வருவீர்கள். ஜூலை 27,28ல் உறவினர்கள் வகையில் மனக்கசப்பு வர வாய்ப்புண்டு. சற்று ஒதுங்கி இருக்கவும். ஆனால் ஆக.11,12,13ல் உறவினர் வருகையால் நன்மை சேரும்.
பணியாளர்கள் வாழ்வில் முன்னேற்றம் காண்பர். பணியிடத்தில் செல்வாக்கு அதிகரிக்கும் பதவி, சம்பள உயர்வுக்கு தடை இருக்காது. சிலருக்கு விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். போலீஸ் மற்றும் ராணுவத்தில் பணிபுரிபவர்கள் தங்கள் கோரிக்கைகளை ஆக.10க்குள் கேட்டு பெறவும். தனியார்துறையில் வேலை பார்ப்பவர்கள் ஆக.2க்கு பிறகு சிறப்பான வளர்ச்சி காண்பர். வேலை நிமித்தமாக குடும்பத்தை விட்டு பிரிந்து சென்றவர்கள் ஒன்று சேருவர். ஆக.9,10ல் விருப்பம் நிறைவேறும். உங்கள் அதிகாரம் கொடிகட்டி பறக்கும்.
தொழில், வியாபாரத்தில் பொருளாதார வளம் சிறக்கும். எதிரிகளால் ஏற்பட்ட முட்டுக்கட்டைகள் அகலும். புதிய தொழில் முயற்சியில் வெற்றி கிடைக்கும். வேலையின்றி இருப்பவர்கள் குறைந்த முதலீட்டில் புதிய தொழிலைத் தொடங்கலாம். தொழில் ரீதியாக வெளியூர் பயணம் சென்றவர்கள் ஆக.2க்கு பிறகு வீடு திரும்புவர். ஜூலை31, ஆக.1,2ல் திடீர் பணவரவுக்கு வாய்ப்புண்டு. கலைஞர்களுக்கு ஜூலை 24க்கு பிறகு முயற்சியில் தடையும், மனதில் சோர்வும் ஏற்படும். புதிய ஒப்பந்தம் கையெழுத்தாக விடாமுயற்சி வேண்டியிருக்கும். புகழ், பாராட்டு கிடைப்பதில் தாமதம் ஆகலாம். அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்கள் நற்பலன் காண்பர். எதிர்பார்த்த பதவி கிடைக்கும். ஆக. 10க்கு பிறகு சிரத்தை எடுத்தே முன்னேற வேண்டியதிருக்கும்.
மாணவர்கள் குருவின் பார்வையால் அதிக மதிப்பெண்கள் பெறுவர். நல்ல நிறுவனத்தில் விரும்பிய பாடப்பிரிவில் இடம் கிடைக்கும். ஆக.2க்கு பிறகு புதன் சாதகமற்ற இடத்தில் இருப்பதால் போட்டிகளில் வெற்றி காண்பது அரிது. விவசாயிகளுக்கு வருமானத்திற்கு குறைவிருக்காது. பயறு வகைகள், நெல், கேழ்வரகு, கரும்பு, பனைத்தொழில். பழவகைகள் போன்றவற்றில் நல்ல மகசூல் கிடைக்கும். கால்நடை வளர்ப்பால் ஆதாயம் பெருகும்.
பெண்கள் குடும்பத்தோடு புனித தலங்களுக்கு சென்று வருவர். சுபவிஷயங்கள் குறித்த பேச்சு நடந்தேறும். விரைவில் நல்ல முடிவு கிடைக்கும். வீடு, மனை, வாகனம் வாங்கலாம். ஆக.2க்கு பிறகு கணவரின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு கோரிக்கைகள் நிறைவேறும். ஆக.3,4 சிறப்பான நாட்களாக இருக்கும். ஆரோக்கியம் மேம்படும்.
* நல்ல நாள்: ஜூலை 20,21,25,26,31 ஆக.1,2,3,4,9,10,11, 12,13,16,17 * கவன நாள்: ஆக.5,6 சந்திராஷ்டமம் * அதிர்ஷ்ட எண்: 1,5,9 * நிறம்: சிவப்பு, வெண்மை
* பரிகாரம்: ● வியாழக்கிழமையில் குருபகவான் வழிபாடு ● சனிக்கிழமையன்று சனீஸ்வரருக்கு தீபம் ● பவுர்ணமியன்று அம்மன் கோயில் தரிசனம்
|