பதிவு செய்த நாள்
14
மே
2019
11:31
ரிஷபத்தில் இருக்கும் புதன் மே29ல் மிதுனத்திற்கு மாறி நற்பலன் தருவார். மற்றும் சுக்கிரன் ஜூன் 4ல் 11-ம் இடத்திற்கு மாறினாலும் மாதம் முழுவதும் நற்பலன் கொடுப்பார். தற்போது தனுசு ராசியில் இருக்கும் குரு மே18ல் அதிசார காலம் முடிந்து விருச்சிக ராசிக்கு மாறுகிறார். இதுவும் சுமாரான இடம் தான். சூரியனால் மதிப்பு மரியாதை எதிர்பார்த்தபடி இருக்காது. வீண்விவாதங்களைத் தவிர்க்கவும்.
குடும்பத்தில் சுக்கிரனால் வசதிகள் பெருகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைக்கும். சகோதரிகள் ஆதரவுடன் செயல்படுவர். மே28 வரை சிலர் பொல்லாப்பை சந்திக்கலாம். பொறுமையுடன் விட்டுக் கொடுத்து போகவும். அதன் பிறகு கணவன், மனைவி இடையே அன்பு, பாசம் மேலோங்கும். சண்டை சச்சரவுகள் அடியோடு மறையும். வீட்டில் மங்களகரமான சூழ்நிலை உருவாகும். பிள்ளைகளால் மகிழ்ச்சியும், பெருமையும் கிடைக்கும். பெண்கள் வகையில் முன்னேற்றமான பலனை எதிர்பார்க்கலாம். குறிப்பாக மே15, ஜூன் 11,12ல் அவர்களால் நன்மை கிடைக்கும். மே21,22,23ல் உறவினர் வகையில் மனக்கசப்பு வரலாம் கவனம். அதே நேரம் ஜூன்7,8 ல் அவர்கள் வருகையால் நன்மை கிடைக்கும்.
பணியாளர்களுக்கு மாதத் தொடக்கத்தில் புதன் சாதகமற்ற நிலையில் இருப்பதால் அதிக பளுவை சுமக்க வேண்டியதிருக்கும் வேலையில் பொறுமையும், நிதானமும் தேவை. தீயோர் சேர்க்கையால் பணத்தை விரயமாக்கியவர்கள் அவர்கள் பிடியில் இருந்து மே28க்கு பிறகு விடுபடுவர். அதன்பின் சகபெண் ஊழியர்கள் ஆதரவுடன் இருப்பர். தனியார் துறையில் வேலைபார்ப்பவர்களுக்கு புதிய பதவி தேடி வரும். மேலதிகாரிகள் அனுசரணையுடன் நடந்து கொள்வர். கோரிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேறும். ஜூன்5,6ல் எதிர்பாராத நன்மைகளை கிடைக்கப் பெறலாம். முக்கிய கோரிக்கைகளை அப்போது வைக்கலாம்
வியாபாரிகளுக்கு வாடிக்கையாளர் மத்தியில் அனுகூலமான போக்கு காணப்படும். பெண்கள் வகையில் இருந்த தொல்லைகள் மே28க்கு பிறகு அடியோடு மறையும்.
மே26,27,28ல் எதிர்பாராத வகையில் பணம் கிடைக்கப் பெறுவர். பகைவர்களை எதிர்த்து வெற்றி கொள்ளும் ஆற்றல் உண்டாகும். மே16,17,18, ஜூன்9,10,13,14ல் உங்களின் முயற்சியில் சிறு தடைகள் வரலாம். பண விரயம் ஆகலாம். ஜூன்3க்கு பிறகு பொருளாதார வளம் கூடும். பெண்களுக்கு சாதகமான திசையில் காற்று வீசுவதால் முக்கிய பொறுப்புகளை அவர்கள் வசம் ஒப்படையுங்கள்.
கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். பாராட்டு, புகழ் தானாக வரும். அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்கள் சீரான நிலையில் இருப்பர். பிரதிபலன் எதிர்பாராமல் உழைக்க வேண்டியதிருக்கும். ஆனால் பணப்புழக்கம் சிறப்பாக இருக்கும். மாணவர்கள் குருவின் பார்வையால் கல்வியில் சிறப்படைவர். அதிக மதிப்பெண்கள், போட்டிகளில் வெற்றி போன்றவை கிடைக்கும். மே28க்கு பிறகு கெட்ட சகவாசத்திற்கு விடைகொடுப்பர். மேல் படிப்பில் விரும்பிய பாடம் கிடைக்கும்.
சிலர் வெளிநாடு சென்று படிக்க வாய்ப்பு கிடைக்க பெறுவர்.
விவசாயிகளுக்கு எதிர்பார்த்த மகசூல் கிடைக்கும். மே28க்கு பிறகு கால்நடை செல்வம் பெருகும். பால்பண்ணை மூலம் நல்ல வருமானம் கிடைக்கும். புதிய சொத்து வாங்கும் எண்ணம் நிறைவேற சிலகாலம் பொறுத்திருக்க வேண்டும்.வழக்கு விவகாரத்தில் மெத்தனமாக இருக்க வேண்டாம்.
பெண்கள் குடும்பத்தில் முக்கிய அம்சமாக திகழ்வர். ஆடம்பர பொருட்கள் கிடைக்க பெறுவர். மே28க்கு பிறகு வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலன் பெறுவர். சிலருக்கு புதிய பதவி தேடி வரும். குருவின் பார்வையால் தடைபட்ட திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் கைகூடும். செவ்வாயால் அக்கம்பக்கத்தினரால் தொல்லை ஏற்படும். சிலரது வீட்டில் பொருட்கள் களவு போக வாய்ப்புண்டு. மே19,20 ஜூன்15ல் புத்தாடை, அணிகலன்கள் வாங்கலாம்.
பிறந்த வீட்டில் இருந்து உதவிகள் கிடைக்கும். மே29,30 சிறப்பான நாட்களாக அமையும். விருந்து, விழா என சென்று வருவீர்கள். சகோதரர்கள் ஆதரவுடன் செயல்படுவர்.
அவர்களால் பண உதவி கிடைக்கும். உஷ்ணம், தோல், தொடர்பான நோய்கள் வரலாம்.
* நல்ல நாள்: மே 15,19,20,26,27,28,29,30 ஜூன் 5,6,7,8,11,12,15
* கவன நாள்: மே 31, ஜூன் 1 சந்திராஷ்டமம்.
* அதிர்ஷ்ட எண்: 5,7
* நிறம்: வெள்ளை, பச்சை
பரிகாரம்:
● சனியன்று பெருமாளுக்கு துளசி அர்ச்சனை
● தினமும் காலையில் நீராடி சூரிய வழிபாடு
● பிரதோஷத்தன்று நந்தீஸ்வரர் அபிஷேகம்