பதிவு செய்த நாள்
19
அக்
2018
15:04
நல்லவர்களின் நட்பை நாடும் மேஷ ராசி அன்பர்களே!
சாதகமற்ற நிலையில் இருந்த புதன், செவ்வாய் இந்த மாதம் நன்மை தரும் இடத்திற்கு மாறுகின்றனர். புதன் அக்.23க்கு பிறகும் செவ்வாய் அக்.27க்கு பிறகும் நற்பலன் கொடுப்பார்கள். செவ்வாயால் அக்.27க்கு பிறகு பொருளாதார வளம் சிறக்கும். பகைவர் தொல்லை மறையும். அபார ஆற்றல் பிறக்கும். ஆடை, ஆபரணம் சேரும். புதிய வீடு, மனை, வாகனம் வாங்க யோகம் கூடி வரும்.
குரு எட்டாம் இடத்தில் இருப்பது கண்டு அஞ்ச வேண்டாம். அவரது 7-ம் இடத்துப் பார்வையால் மனதில் துணிச்சல் பிறக்கும். பண வரவு கூடும். தேவையான பொருட்களை வாங்கலாம். பகைவர் சரணடையும் நிலை ஏற்படும்.
மாதத் தொடக்கத்தில் குடும்பத்தில் ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து போகவும். புதனால் ஏற்பட்ட குடும்ப பிரச்னை, கணவன், -மனைவி இடையே இருந்த கருத்து வேறுபாடு அக்.23க்கு பிறகு மறையும். அதன் பிறகு வீட்டுக்கு தேவையான வசதிகள் கிடைக்கும். புத்தாடை, அணிகலன்கள் வாங்கலாம். எடுத்த முயற்சி வெற்றி அடையும். சுபநிகழ்ச்சிகள் தடையின்றி நடக்கும். பிள்ளைகளால் மகிழ்ச்சியும், பெருமையும் உண்டாகும். அக். 20,21, நவ.16 ல் உறவினர் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும் ஆனால் அக்.31, நவ.1ல் உறவினர் வகையில நெருக்கம் வேண்டாம். அக். 24,25,26ல் சகோதரிகள் உறுதுணையாக இருப்பர். விருந்து விழா என சென்று வருவீர்கள்.
பணியாளர்கள் அக்.26க்கு பிறகு சிறப்பான முன்னேற்றம் காணலாம். சிலர் பதவி உயர்வு காண்பர். பணியிடத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். அதிகாரிகளின் ஆதரவு எதிர்பார்த்தபடி கிடைக்கும். கோரிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேறும். அக்.18,19, நவ.13,14,15ல் பணியிடத்தில் அதிகாரம் கொடிகட்டி பறக்கும். முக்கிய கோரிக்கைகளை அப்போது வைக்கலாம். வியாபாரிகள் நல்ல முன்னேற்றத்துடன் இருப்பர். எதிர்பார்த்தபடி லாபம் கிடைக்கும். அக். 27 க்கு பிறகு எதிரிகளால் ஏற்பட்ட முட்டுக்கட்டை அகலும். புதிய வியாபாரம் ஓரளவு அனுகூலத்தை கொடுக்கும். வெளியூர் பயணத்தால் சாதகமான பலன் கிடைக்கப் பெறுவர். நவம்பர் 4,5ல் எதிர்பாராத வகையில் திடீர் வருமானம் கிடைக்கும்.
அக்.22,23,27,28ல் சந்திரனால் தடைகள் வரலாம். கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் பெற தடைகளை சந்திக்க வேண்டியதிருக்கும். சுக்கிரனால் பெண்கள் வகையில் தொல்லைகள் வரலாம். சற்று ஒதுங்கி இருக்கவும். அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்கள் அக்.27க்கு பிறகு முன்னேற்றம் காணலாம். எதிர்பார்த்த புகழ், பாராட்டு கிடைக்கும். நவ.2,3ல் குழப்பம் ஏற்படலாம்.
மாணவர்கள் மாத தொடக்கத்தில் சிரத்தை எடுத்து படித்தால் தான் பலன் கிடைக்கும். அக்.23க்கு பிறகு அதிக வளர்ச்சியை எதிர்நோக்கலாம். ஆசிரியர்களின் அறிவுரை உதவிகரமாக இருக்கும். போட்டிகளில் பங்கேற்று வெற்றி காணலாம்.
விவசாயிகள் நல்ல மகசூல் கிடைக்கப் பெறுவர். கேழ்வரகு, சோளம் போன்ற பயிர்கள் மூலம் நல்ல மகசூல் பெறுவர். அக்.27க்கு பிறகு பால்பண்ணை மூலம் நல்ல வருமானம் கிடைக்கும். புதிய சொத்து வாங்க அனுகூலம் உண்டாகும்.
பெண்கள் மகிழ்ச்சியுடன் காணப்படுவர். அக்.23க்கு பிறகு தடைபட்ட திருமணம் நடைபெறும். அக்கம்பக்கத்தினர் அனுசரணையுடன் இருப்பர். அக்.29,30 ஆகிய நாட்கள் குதூகலமான நாட்களாக அமையும். புத்தாடை, அணிகலன்கள் வாங்கலாம்.
அக்.23க்கு பிறகு தனியார் துறையில் வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலனைப் பெறுவர். நவ.13க்கு பிறகு கணவன்- மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துப் போகவும்.
* நல்ல நாள்: அக்.18,19,20,21,24,25,26,29,30.நவ.4,5,6,7,8,13,14,15,16
கவன நாள்: நவம்பர் 9,10 சந்திராஷ்டமம்.
* அதிர்ஷ்ட எண்: 1,3
* நிறம்: பச்சை,சிவப்பு
* பரிகாரம்:
● தினமும் காலையில் சூரிய நமஸ்காரம்
● வெள்ளியன்று அம்மனுக்கு அர்ச்சனை
● ஞாயிறன்று ஏழைகளுக்கு ஆடை தானம்