பதிவு செய்த நாள்
14
ஜூன்
2018
17:27
நல்லவர் கருத்தை மதிக்கும் விருச்சிக ராசி அன்பர்களே!
உங்கள் ராசிக்கு 3-ம் இடத்தில் இருக்கும் செவ்வாய், கேதுவால் நன்மை அதிகரிக்கும். ஜூன் 24 வரை புதனால் அனுகூலம் உண்டாகும். அதன் பின் அவர் கடகத்திற்கு வந்து நன்மை தர மாட்டார். மேலும் 9-ம் இடத்தில் இருக்கும் சுக்கிரன் ஜூலை 5 வரை கடகத்தில் இருந்து நன்மை தருவார்.
செவ்வாய், கேதுவால் மனதில் பக்தி உயர்வு மேம்படும். புதிய முயற்சிகளில் வெற்றி காணலாம். பொருளாதார வளம் மேம்படும். எதிர்பார்ப்பு நிறைவேறும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். புதிய வீடு, மனை, வாகனம் வாங்க யோகமுண்டு. புதனால் பொன், பொருள் சேரும். பிள்ளைகள் நற்செயலில் ஈடுபட்டு பெருமை சேர்ப்பர். பெண்கள் உறுதுணையாக இருப்பர்கணவன், மனைவி இடையே அன்னியோன்யமான சூழ்நிலை இருக்கும். சிலர் குழந்தை பாக்கியம் பெறுவர். நீண்டகால எதிர்பார்ப்பு நிறைவேறும்.
புத்தாடை அணிகலன்கள் வாங்கயோகமுண்டு. ஜூன் 24க்கு பிறகு சிலர் பொல்லாப்பை சந்திக்கலாம். பொறுமையுடன் இருக்கவும், விட்டுக்கொடுத்து போகவும். ஜூன் 25,26ல் நண்பர்கள் உதவி கரமாக செயல்படுவர். ஜூன் 21,22ல் உறவினர்கள் வருகையும், அவர்களால் நன்மையும் உண்டாகும்.பணியாளர்களுக்கு பணியிடத்தில் மதிப்பு அதிகரிக்கும்.
சிலருக்கு பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புண்டு. மேல் அதிகாரி களின் கருணை பார்வை கிடைக்கும். கோரிக்கைகள் ஒவ்வொன் றாக நிறைவேறும். போலீஸ், ராணுவத்தில் பணிபுரிபவர்கள் உயர்ந்த நிலையை அடைவர். ஜூன் 24க்கு பிறகு உங்கள் திறமைக்கு ஏற்ற பொறுப்பு கிடைக்காமல் போகலாம். சிலர் திடீர் இடமாற்றத்தை சந்திக்கலாம். அரசு ஊழியர்கள் வேலையில் அதிக கவனமுடன் இருக்கவும். ஜூன் 18,19,20, ஜூலை 16 ல் எதிர்பாராத நற்பலன் உண்டாகும்.
தொழில், வியாபாரத்தில் அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். அரசு வகையில் அனுகூலமான போக்கு காணப்படவில்லை. கோயில் மற்றும் புண்ணிய காரியங்களுக்கான தொழில்கள் சிறந்துவிளங்கும். ஜூன் 23,24,27,28,29 ல் சந்திரனால் சிறு தடைகள் குறுக்கிடலாம். ஜூலை 7,8ல் எதிர்பாராத வகையில் பணம் கிடைக்க வாய்ப்புண்டு.
எதிரிகளின் இடையூறை முறியடிக்கும் வல்லமை பெறுவீர்கள். சனிபகவானால் சிலருக்கு பொருளாதார இழப்பு உண்டாகலாம்.
கலைஞர்கள் பாராட்டு, புகழ் தானாக வரும். புதிய ஒப்பந்தம் எளிதில் கையெழுத்தாகும். ஜூலை5க்கு பிறகு எதிரிகளால் தொல்லை, மறைமுகப் போட்டி அதிகரிக்கும்.
தொழில்ரீதியாக வெளியூர் பயணம் மேற்கொள்வர். பொதுநல சேவகர்கள், அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த பதவி கிடைக்கும். மக்கள் மத்தியில் செல்வாக்கு அதிகரிக்கும். ஜூலை 2,3,4ல் மனக்குழப்பம் ஏற்படலாம்.
மாணவர்கள் நல்ல வளர்ச்சியைக் காணலாம். போட்டி, பந்தயங் களில் பங்கேற்று வெற்றி காண்பர். மேல்படிப்பில் விரும்பிய பாடப்பிரிவில் இடம் கிடைக்கும். ஜூன் 24க்கு பிறகு வீண் அலைச்சல் ஏற்படலாம். நண்பர்களின் விஷயத்தில் கவனம் தேவை.
விவசாயிகளுக்கு வளம் கொழிக்கும் மாதமாக இருக்கும். எதிர்பார்த்ததை விட விளைச்சல் சிறப்பாக இருக்கும். வருமானம் அதிகரித்து புதிய சொத்துக்கள் வாங்கும் நிலை உருவாகலாம். கால்நடை வகையிலும் எதிர்பார்த்த பலன் கிடைக்கும். வழக்கு
விவகாரங்களில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். பக்கத்து நிலத்துக் காரர் வகையில் இருந்த தொல்லை மறையும்.
பெண்களால் குடும்பம் சிறந்து விளங்கும். குடும்பத்தோடு புனித தலங்களுக்கு சென்று வருவீர்கள். வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலன் பெறுவர்.
சுய தொழில் செய்யும் பெண்களுக்கு வங்கி கடன் எளிதாக கிடைக்கும். ஜூன் 24க்கு பிறகு கணவர் மற்றும் குடும்பத்தாரிடம் விட்டுக் கொடுத்து போகவும்.
ஜூன்30, ஜூலை1ல் புத்தாடை, ஆபரணம் வாங்கலாம். ஜூலை 9,10,11ல் இனிய அனுபவம் கிடைக்க வாய்ப்புண்டு.
* நல்ல நாள்: ஜூன் 18,19,20,21,22,25, 26,30,ஜூலை 1,7,8,9,10,11,16
* கவன நாள்: ஜூலை 12,13 சந்திராஷ்டமம்
* அதிர்ஷ்ட எண்: 3,9 நிறம்:சிவப்பு, பச்சை
* பரிகாரம்:
● செவ்வாயன்று முருகனுக்கு பாலபிேஷகம்
● சனிக்கிழமை ஆஞ்சநேயருக்கு அர்ச்சனை
● ஞாயிறன்று ராகுகாலத்தில் பைரவர் வழிபாடு.