Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news கடகம்: (புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம்) ... கன்னி: (உத்திரம் 2,3,4, அஸ்தம், சித்திரை 1,2) + தொட்டதெல்லாம் துலங்கும் - வியாபாரத்தில் சிறு விரயம்! (100/80) கன்னி: (உத்திரம் 2,3,4, அஸ்தம், சித்திரை 1,2) ...
முதல் பக்கம் » ஆங்கில புத்தாண்டு ராசிபலன் - 2021
சிம்மம்: (மகம், பூரம், உத்திரம் 1) + சாதக காற்று வீசுது! - பாதகம் கொஞ்சம் இருக்குது! 55/100
எழுத்தின் அளவு:
சிம்மம்: (மகம், பூரம், உத்திரம் 1) + சாதக காற்று வீசுது! - பாதகம் கொஞ்சம் இருக்குது! 55/100

பதிவு செய்த நாள்

29 டிச
2015
14:08

எதையும் தைரியத்துடன் எதிர்கொள்ளும் சிம்ம ராசி அன்பர்களே!

உங்களுக்கு தற்போது 2-ம் இடத்தில் குரு சாதகமாக இருந்து நன்மை தந்து கொண்டிருக்கிறார். அவர் மூலம் துணிச்சல் பிறக்கும். பணவரவு கூடும். தேவையான பொருட்களை வாங்கலாம். பகைவர்களின் இடையூறு மறையும். இந்த நிலையில் இந்த ஆண்டு மிகச்சிறப்பாக அமையும். இடர்பாடுகள் அனைத்தும் இருக்குமிடம் தெரியாமல் மறையும். குடும்பத்தில் நிலவி வந்த குழப்பத்திற்கு விடுதலை கிடைக்கும். எந்த பிரச்னையையும் முறியடித்து முன்னேறும் வல்லமை பெறுவீர்கள். குரு பிப். 7 முதல் ஆக. 1 வரை வக்கிரம் அடைகிறார். இந்த காலக்கட்டத்தில் அவரால் கிடைக்கும் நற்பலன்கள் சற்று குறையலாம். சனி பகவான் தற்போது 4-ம் இடத்தில் இருக்கிறார். இந்த இடத்தில் இருக்கும் போது சனிபகவான் ஊரை விட்டோ, தாயை விட்டோ பிரிந்து செல்லும் பாதக நிலையை உருவாக்குவார். சனி சாதகமற்ற இடத்தில் இருந்தாலும் அவரது 3-ம் இடத்துப் பார்வையால் காரிய அனுகூலத்தையும், பொருளாதார வளத்தையும், குடும்பத்தில் மகிழ்ச்சியையும், தொழில் விருத்தியையும் தருவார். அவர் மார்ச் 28 முதல் ஜூலை 14 வரை வக்கிரம் அடைகிறார். இந்த காலத்தில் அவர் சிறப்பாக செயல்பட முடியாது என்பதால் பலனின் அளவு குறையும். இனி முக்கிய கிரகங்களின் அடிப்படையில் பொதுவான பலனை காணலாம். எந்த ஒரு செயலையும் வெற்றிகரமாக நிறைவேற்றலாம். அதற்கு ஆண்டின் தொடக்கத்திலும், பிற்பகுதியிலும் குரு உறுதுணையாக இருப்பர். இதனால் முன்னேற்ற சம்பவங்கள் அதிகரிக்கும். பொருளாதார வளம் சிறப்பாக இருக்கும். எந்த பிரச்னை வந்தாலும் அதை எளிதில் முறியடிப்பீர்கள்.

செல்வாக்கு, சேமிப்பு அதிகரிக்கும். தேவைகள் பூர்த்தியாகும். பிப். 7 முதல் ஆக. 1 வரை மதிப்பு மரியாதை எதிர்பார்த்தபடி இருக்காது. வீண் விவாதத்தை தவிர்த்து பொறுமையாக இருக்க வேண்டும். செலவு களும் ஏற்படும். அதன்பின் உங்கள் செல்வாக்கு மேலோங்கும். அக்கம் பக்கத்தினர் உங்களை புகழ்வர்.  குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறை இருக்காது. கணவன்-மனைவி இடையே அன்பு மேம்படும். வீட்டுக்கு தேவையான அனைத்து வசதிகளும் கிடைக்கும். மே மாதத்திற்கு பிறகு வீட்டில் ஆனந்தம் அதிகரிக்கும். தற்போது தடைபட்டு வந்த திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் தடையின்றி நடக்கும். நல்ல வரன் கிடைக்கும். விருந்து, விழா என சென்று வரலாம். கேதுவால் தம்பதி இடையே கருத்து வேறுபாடு வந்தாலும், உடனடியாக மறைந்து போகும். ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் வீடு, மனை வாங்கும் யோகம் கூடி வரும். சிலர் தற்போதுள்ளதை விட வசதியான வீட்டுக்கு குடிபோகலாம். புதிய வாகனம் வாங்கலாம்.

தொழில், வியாபாரம்: லாபம் அதிகரிக்க அதிகமாக உழைக்க வேண்டியிருக்கும். எனினும் வருமானம் அதிகரிக்கும். மார்ச் மாதத்திற்கு பிறகு பத்திரிகை, தானியம், தங்கம், உலோக வியாபாரம் சிறப்பாக இருக்கும். அவ்வப்போது போட்டியாளர்களின் இடையூறுகள் வந்தாலும், சாதுர்யமாக முறியடிப்பீர்கள். ஆகஸ்ட் மாதத்தில் இருந்து வெகுவான முன்னேற்றம் கிடைக்கும். அரசின் உதவி கிடைக்கும்.

பணியாளர்கள்: பிப்ரவரி முதல் ஜூலை வரை கோரிக்கைகளை அதிக முயற்சி எடுத்தே நிறைவேற்ற வேண்டியது இருக்கும். வேலைப்பளு கூடும். ஆனால் ஆகஸ்ட் முதல் உங்களுக்கு சாதகமான காற்று வீசும். மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். தடைப்பட்ட சம்பள உயர்வு, பதவி உயர்வு கிடைக்கும். விரும்பிய இடத்துக்கு மாற்றம் கிடைக்கப் பெறலாம். பொருளாதாரத்தில் முன்னேற்றம் காணலாம். வேலையின்றி இருப்பவர்கள் முயற்சி செய்தால் வேலை கிடைக்கும்.

கலைஞர்கள்: புதிய ஒப்பந்தங்கள் பெற்று முன்னேற்றம் காணலாம். மதிப்பு பாராட்டு கிடைக்கும். சிலர் வெளிநாடுகளுக்கு சென்று வருவர். தட்டி பறிக்கப்பட்ட புகழ், பாராட்டு போன்றவை ஜூலை மாதத்திற்கு பிறகு கிடைக்கும்.

அரசியல்வாதிகள்: உன்னத நிலையை அடையலாம். எதிர்பார்த்த பதவி கிடைக்கும்.

மாணவர்கள்: குருவால் சிறப்பான நிலையை காணலாம்.ஆசிரியர்களின் அறிவுரை கைகொடுக்கும். சிலர் மாநில ரேங்க் எடுக்கும் நிலைக்கு வருவர். எதிர்பார்த்த பாடப்பிரிவு கிடைக்கும்.

விவசாயிகள்: சீரான வருவாய் காணலாம். புதிய சொத்து வாங்க நினைப்பவர்கள் ஆண்டின் தொடக்கத்தை பயன்படுத்திக் கொள்ளவும். ஆகஸ்ட் மாதத்தில் இருந்து நெல், கோதுமை, கேழ்வரகு போன்ற பயிர்களில் நல்ல மகசூல் பெறலாம். சிறு தொழில் செய்பவர்கள் படிப்படியாக முன்னேற்றம் காண்பர். கூலி வேலை செய்பவர்கள் நல்ல வருமானம் காண்பர். வழக்கு விவகாரங்களில் தீர்ப்பு உங்கள்பக்கம் அமையும். கைவிட்டுப்போன சொத்து மீண்டும் கிடைக்கும்.

பெண்கள்: மகிழ்ச்சி பொங்க காணப்படுவர். கணவரின் அன்பு கிடைக்கும். புத்தாடை, நகை வாங்கலாம். பிள்ளைகளால் பெருமை கிடைக்கும். உடல் நலம் சிறப்பாக இருக்கும்.

பரிகாரம்: பத்ரகாளியம்மனுக்கு விளக்கு ஏற்றி பூஜை செய்யவும். சனிக்கிழமைகளில் சனிபகவானை வணங்கலாம். பெருமாள் கோவிலுக்கு சென்று வாருங்கள். ஊனமுற்றவர்களுக்கும், மூதாட்டிகளுக்கும் இயன்ற உதவி செய்யுங்கள்.

செல்ல வேண்டிய கோவில்:
காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவில்.

 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar