பதிவு செய்த நாள்
12
மே
2020
17:26
உங்கள் ராசிக்கு 3ல் உள்ள சனி, கேது மாதம் முழுவதும் நற்பலனை வழங்குவர். சுக்கிரன் ஜுன் 4 ல் வக்கிரம் அடைந்து மிதுனத்தில் இருந்து ரிஷப ராசிக்கு மாறினாலும் நன்மை கிடைக்கும். புதன் மே 24 வரை 8ம் இடத்தில் இருந்து நன்மை தருவார். சனி உங்கள் ராசிக்கு 3ம் இடத்தில் இருந்து நன்மை தருகிறார். அவரால் முயற்சியில் வெற்றி, பொருளாதார வளம், குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கேதுவால் பக்தி உயர்வு மேம்படும். செயல் அனைத்திலும் வெற்றி காணலாம். பொருளாதார வளம் மேம்படும்.
குடும்பத்தில் புதனால் புதிய முயற்சிகள் வெற்றி கிட்டும். ஆடை, அணிகலன்கள் வாங்கலாம். பிள்ளைகளால் மகிழ்ச்சியும் பெருமையும் கிடைக்கும். மே 24க்கு பிறகு. சிலர் பொல்லாப்பை சந்திக்கலாம். பொறுமையுடன் விட்டுக் கொடுத்து போகவும். ஜுன் 4க்கு பிறகு சுக்கிரனால் ஆடம்பர வசதிகள் பெருகும். பெண்கள் ஆதரவுடன் செயல்படுவர். பொருளாதார வளம் கூடும்.
பெண்களுக்கு சகோதரவழியில் ஆதரவு கிடைக்கும். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் கைகூடும். உறவினர் வீட்டு சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். குடும்பத்தோடு புனித தலங்களுக்கு செல்வீர்கள். பெற்றோர் வீட்டில் இருந்து பணஉதவி கிடைக்கப் பெறலாம். கணவனின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். உங்களை புரிந்து கொள்ளாமல் இருந்த குடும்பத்தினர் உங்களின் அன்பை உணர்ந்து அனுகூலமாக நடப்பர். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு வேலையில் நிம்மதியும் திருப்தியும் கிடைக்கும். வியாபாரம் செய்யும் பெண்களுக்கு லாபத்துக்கு குறைவிருக்காது. வியாபாரம் செய்யும் பெண்கள் கூடுதல் வருமானம் காண்பர். செவ்வாயால் உடல்நலம் லேசாக பாதிக்கப்படலாம். குறிப்பாக பிள்ளைகள் நலனில் அக்கறை தேவை.
சிறப்பான பலன்கள்
* தொழிலதிபர்களுக்கு லாபத்திற்கு குறைவிருக்காது. பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் முன்னேற்றம் பெறும். பங்கு வர்த்தகம் நல்ல லாபத்தை தரும்.
* வியாபாரம் ஆன்மிக சம்பந்தபட்ட மற்றும் பூஜை பொருள் வியாபாரம் செய்பவர்கள் அதிக லாபத்தை பெறுவர்.
* தரகு, கமிஷன் தொழிலில் ஈடுபடுவோர் கூடுதல் வருமானம் கிடைக்கப் பெறுவர்.
* தனியார் துறை பணியாளர்கள் சீரான வளர்ச்சி காண்பர். மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். சக ஊழியர்கள் ஒத்துழைப்புடன் இருப்பர். கோரிக்கைகளை மே 24க்குள் கேட்டு பெறவும்.
* ஐ.டி., துறையினருக்கு கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேறும். சகபெண் ஊழியர்கள் ஆதரவுடன் நடப்பர்
* மருத்துவர்கள் உன்னத பலனை எதிர்பார்க்கலாம். அவர்களுக்கு கோரிக்கைகள் நிறைவேறும்.
* வக்கீல்களுக்கு வழக்கு, விவகாரங்களில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும்.
* போலீஸ், ராணுவத்தினர் சிறப்பான முன்னேற்றம் காணலாம். மேலதிகாரிகளின் ஆதரவு இருக்கும். வேலைப்பளு குறையும்.
* அரசியல்வாதிகள் சீரான பலனை காண்பர். எதிர்பார்த்த பதவியை அடைய விடாமுயற்சி தேவைப்படும்.
* பொதுநல சேவகர்கள் நற்பெயர் கிடைக்கப் பெறுவர். புகழ் வளர்முகமாகவே இருக்கும்.
* கலைஞர்களுக்கு பெண்கள் உதவிகரமாக இருப்பர். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.
* விவசாயிகள் மானாவாரி பயிர்கள் மூலம் அதிக மகசூல் கிடைக்கப் பெறுவர். புதிய சொத்து வாங்க சில காலம் பொறுத்திருக்க வேண்டும். கால்நடை வளர்ப்பில் நல்ல வருமானத்தை பெறுவர்.
சுமாரான பலன்கள்
* தொழிலதிபர்களுக்கு அரசு வகையில் அனுகூலம் இல்லை. எனவே வரவு-செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும். மே 24க்கு பிறகு சிலர் தீயோர் சேர்க்கையால் பணத்தை விரயமாக்கலாம். எனவே யாரிடமும் எச்சரிக்கையுடன் பழகவும்.
* வியாபாரிகளுக்கு எதிரிகளின் இடையூறு தலைதுாக்கும். பிறருக்கு கட்டுப்பட்டு போகும் நிலை உருவாகலாம்.
* தனியார் துறை பணியாளர்களுக்கு மே 24க்கு பிறகு வேலைப்பளு இருக்கும். மேலதிகாரிகளிடம் அனுசரித்து போகவும். வேலையில் பொறுமையும், நிதானமும் தேவை.
* அரசு பணியாளர்கள் பணியில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது.
* ஆசிரியர்கள் பணிச்சுமையால் உடல்நலக்குறைவுக்கு ஆளாக நேரிடலாம்.
* பள்ளி, கல்லுாரி மாணவர்கள் மே24க்கு பிறகு நண்பர்களின் விஷயத்தில் விழிப்புடன் இருக்கவும்.
நல்ல நாள்: மே 17,18,19,20,21,27,28,29,30, ஜுன் 12,3,4,7,8,14
கவன நாள்: மே 22,23,24, சந்திராஷ்டமம்
அதிர்ஷ்ட எண்: 4,6 நிறம்: வெள்ளை, கருப்பு
பரிகாரம்:
* செவ்வாயன்று முருகன் வழிபாடு
* காலையில் நீராடி சூரிய தரிசனம்
* ஞாயிறன்று ஏழைகளுக்கு தானம்