Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » நாலு பேருக்கு சொல்லுங்க!
 
பக்தி கதைகள்
நாலு பேருக்கு சொல்லுங்க!

ஒரு நல்ல விஷயம் தெரிந்தால், அதை நாலு பேருக்கு சொல்லி பயன் பெறச்  செய்ய வேண்டும் என்பதைச் சொல்லும் வேடிக்கை கதை இது.

ஒரு பெண்ணுக்கு இரண்டு தன்னம்பிக்கை பாட்டும், அவற்றின் பொருளும்  தெரியும். அது தனக்கு மட்டுமே தெரிந்திருக்க வேண்டும். மற்றவருக்கு தெரிந்தால்  முன்னேறி விடுவார்கள் எனக் கருதி வெளிப்படுத்தாமல் இருந்தாள்.  கணவரிடம்  கூட  சொல்லியதில்லை. அவன் தன்னை விட புத்திசாலியாகி விடக்கூடாதே  என்பதே காரணம். அந்த பாடல்களும், பொருளும் அவளைப் பழி வாங்க  முடிவெடுத்தன. பாடல்கள் செருப்பாக மாறி அவள் வீட்டு வாசலில் கிடந்தன.

பொருள் சட்டையாக மாறி வீட்டுக்குள் நுழைந்தது.  வெளியே போன கணவர்  வீட்டுக்குள் நுழையும் போது,  செருப்பை பார்த்து யாரோ வந்திருக்கிறார் என  யூகித்தான். உள்ளே கிடந்த சட்டையைப் பார்த்து, “யார் வந்தது?” எனக் கேட்டான்.

’யாரும் வரவில்லையே!’ என அவள் சொன்னாள். அவள் மீது சந்தேகப்பட்டு  அடித்தான். வருத்தத்துடன் கோயில் மண்டபத்தில் போய் படுத்தான். அப்போது  அங்கு  ஒவ்வொரு வீட்டிலும் அணைக்கப்பட்ட தீபங்கள் வந்து சேர்ந்தன.

கடைசியாக வந்த தீபம், “இதோ! படுத்திருக்கிறானே! இவன் மனைவியை  சந்தேகப்பட்டவன்” என நடந்ததை மற்ற தீபங்களிடம் விளக்கியது.  உண்மையை  உணர்ந்த அவன், மனைவியிடம் மன்னிப்பு கேட்டதோடு பாட்டையும்,  பொருளையும் கேட்டான். அவை செருப்பு, சட்டையாக மாறிவிட்டதால்  அவளுக்கும் மறந்து போனது.  இனியாவது பயனுள்ள விஷயங்களை  உடனுக்குடன் பகிர்ந்து கொள்ளுங்கள்!


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar