Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » பருந்துக்கு கிடைத்த விருந்து
 
பக்தி கதைகள்
பருந்துக்கு கிடைத்த விருந்து

குளத்தில் மீனவர்கள் சிலர் மீன் பிடித்தனர். இதை பார்த்த பருந்து ஒன்றுக்கு மீன் உண்ண ஆசை எழுந்தது. அருகிலிருந்த  மரத்தில் காத்திருந்தது.  மீனவர்கள் குளத்திற்குள் இறங்கியதும்  விர்ரென்று கீழிறங்கி பெரிய மீன் ஒன்றை கொத்திச் சென்றது. இதைக் கண்ட காகம் ஒன்று  கா கா என்று கத்திக் கொண்டே பருந்தை துரத்த ஆரம்பித்தது. காகம் துரத்துவதை பருந்து பொருட்படுத்தவில்லை.  

கொஞ்ச நேரத்தில் காகங்களின் எண்ணிக்கை அதிகமாகவே, பருந்திற்கு  பயம் வந்து நிலை தடுமாறியது. எங்கெங்கோ சுற்றியும் காகங்கள்  விடுவதாக இல்லை. வலிமையான பருந்தாக இருந்தாலும் நிறைய காகங்கள் துரத்தும் போது என்ன செய்ய முடியும்?   பயத்தில் பருந்துக்கு கத்த வேண்டும் போலிருந்தது. வாய் விட்டு கத்தியது. வாயிலிருந்த மீன் கீழே விழுந்தது. அதைக் கண்டதும் மீனை எடுக்க கீழே விரைந்தது பருந்து. ஆனால் அதற்கும் முன்னதாக மீனை நோக்கி காகங்கள் சென்றன. பருந்துக்கு  இப்போது தான் விஷயம் புரிந்தது.

ஓ... இவ்வளவுக்கும் காரணம் மீன் தானா... என அறிந்து தப்பித்தோம் பிழைத்தோம் என நிம்மதி அடைந்தது. ஆசை இருக்கும் வரை துன்பம் துரத்தும். சீடர்களுக்கு  ராமகிருஷ்ணர் சொன்ன கதை இது.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar