Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » திரும்பி வந்த திருமால்
 
பக்தி கதைகள்
திரும்பி வந்த திருமால்

வைகுண்டத்தில்  படுத்திருந்த திருமாலுக்கு பாதசேவை செய்தாள் மகாலட்சுமி. திடீரென கண் விழித்த திருமால் எழுந்து ஓடத் தொடங்கினார். லட்சுமி பதறினாள். ""சுவாமி என்னாயிற்று?
""பூமியில் என் பக்தன் ஒருவனுக்கு ஆபத்து வரப்போகிறது. நான் போய் அவனை காப்பாற்றி விட்டு வருகிறேன் என்று சொல்லிக்கொண்டே சென்றார். ஆனால் சென்ற வேகத்தில் வைகுண்டம் திரும்பினார். ""என்ன நடந்தது சுவாமி? அதற்குள் வந்து விட்டீர்களே...? என லட்சுமி கேட்டாள்.

""என் பக்தன் ஒருவன் தன்னை மறந்தநிலையில் என் திருநாமத்தை சொல்லியபடி வந்து கொண்டிருந்தான். அப்போது ஆற்றங்கரையில் காய வைத்திருந்த துணிகளை தெரியாமல் மிதித்து விட்டான். அதைக் கண்ட துணியின் உரிமையாளன் பிரம்புடன்  அடிக்க ஓடி வந்தான். அதைத் தடுக்கவே நானும் சென்றேன் லட்சுமிக்கு ஆர்வம் தாங்காமல் ""பக்தனை காப்பாற்றினீர்களா, இல்லையா...? இடைமறித்தாள்.

""இல்லை ""ஏன் சுவாமி?  ""பதிலுக்கு என் பக்தனும் ஒரு செங்கல்லை எடுத்து அவன் மீது எறியப் போனான். நான் திரும்பி வந்துவிட்டேன் என்றார்.   பக்திக்கு பெருமை சேர்ப்பது பொறுமை என்பதை லட்சுமி உணர்ந்தாள்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar