Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » கைப்பிடி சோறு போதும்
 
பக்தி கதைகள்
கைப்பிடி சோறு போதும்

உலகின் பெரிய செல்வந்தன் நானே என தற்பெருமை கொண்டான் குபேரன். அதை நிலைநாட்ட கைலாயம் சென்ற அவன், சிவபெருமானைத் தன் அரண்மனைக்கு விருந்துண்ண அழைத்தான். அவனது எண்ணம் அறிந்த சிவன் “ இப்போது என்னால் வர இயலாது. என் மூத்தபிள்ளை விநாயகரை உன்னுடன் அழைத்துச் செல். அவன் திருப்தி அடைந்தால் எனக்கு மகிழ்ச்சியே” என்றார்.  விநாயகரும் குபேரனுடன் புறப்பட்டார். அங்கு இலையில் பரிமாறிய உணவை எல்லாம் விருப்பமுடன் சாப்பிட்டார். ஆனால் அவருக்கு வயிறு நிரம்பவில்லை. அரண்மனையில் உள்ளவர் களுக்காக இருந்த உணவும் கூட காலியானது.  அப்போதும் பசி அடங்கவில்லை. இப்படியே போனால் எதுவும் மிஞ்சாது என்ற நிலையில் விநாயகர், “ என்னை திருப்திப்படுத்தினால் தான் என் தந்தை மகிழ்வேன் என்றாரே... ஆனால் எனக்கோ பசி தீர்ந்தபாடில்லை. அதனால் உன்னையே கொன்று தின்னப் போகிறேன்”  என்று துதிக்கையை நீட்டினார்.  பயத்தில் குபேரன் கைலாயம் நோக்கி ஓடினான். சிவனிடம் தன்னைக் காப்பாற்றும்படி வேண்டினான். அப்போது சிவன் “ பயப்படாதே... உன் ஆணவ எண்ணத்தை கைவிட்டு  கைப்பிடி சோறு கொடுத்தாலும் போதும். பசியடங்கி விடும்” என்றார். தவறை உணர்ந்த குபேரன் கரம் குவித்து வணங்கினான்.  பணிவுடன் பிடி சோற்றை விநாயகருக்கு அளித்ததும் அவரது பசியடங்கியது.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar