Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » மானத்தை விட்டுடறேன்
 
பக்தி கதைகள்
மானத்தை விட்டுடறேன்

ஒரு கணவனும் மனைவியும் கயாவுக்கு சென்று தர்ப்பணம் செய்யும் போது, அங்கிருந்த பண்டா (பூசாரி),  “ஐயா, கயாவிற்கு வந்தால் விருப்பமானது எதையாவது விட்டுவிட வேண்டுமே... நீங்கள் எதை விட போகிறீர்கள்?” என்று கேட்டார்.  கணவனோ யோசித்து கொண்டே இருந்தார். பண்டா கேட்டார் “கத்தரிக்காயை  விட்டுடறீங்களா?”  “எனக்கு அது ரொம்ப பிடிக்குமே..”

“அப்ப, கேரட்?“
“அதுல சத்து நிறைய இருக்கே...”
“சரி.... தக்காளியை விட்டுடறீங்களா?“
“அது விலை குறைவு. அதுனால வேணும்...”
“அப்ப, உருளைக்கிழங்கு?”
“பூரிக்கு மசால் செய்ய வேணுமே...”
சலிப்பான பண்டா, “இப்ப எதை தான் விடப் போறீங்க? என்று கேட்டார்.  கணவன் யோசித்து,  ‘காசு பணம் செலவில்லாதது அது ஒண்ணு தான்’ என்று நினைத்து கொண்டே,  “நான் மானத்தை விட்டுடறேன் சாமி..” என்றார்.  பண்டாவுக்கு மானம் என்றால் என்னவென்று தெரியாததால், அவர் சொன்ன படியே சொல்லி தர்ப்பணம் செய்தார். பின் மனைவியிடம்,  “நீ எதையம்மா விடப் போகிறாய்?” என்றார். அவள் கணவனை முறைத்தபடி,“நான் இந்த ஆளையே விட்டுடறேன்” என்றாள்.  “ஏம்மா...?”  “மனுஷன்னா மானம் தான் முக்கியம். அதுவே இல்லாத ஒருத்தனோட எப்படி வாழ முடியும்?” என்றாள். இந்த நகைச்சுவை கதையை வாரியார் அடிக்கடி சொல்வார்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar