Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » கடவுள் எப்படி இருப்பார்?
 
பக்தி கதைகள்
கடவுள் எப்படி இருப்பார்?

ஒரு சமயம் சீடர் ஒருவர் குருவிடம், “கடவுள் எப்படி இருப்பார்? எங்கு இருக்கிறார்?” என்று கேட்டார். “கடவுள் எல்லா இடங்களிலும் இருக்கிறார். சர்வ ஞானமும் பெற்ற பேரின்பம் நிறைந்த வடிவம்தான் கடவுள், நீயும் கடவுள்தான் ” என்றார், குரு. “அப்படியானால் அவரை ஏன் என்னால் உணரமுடியவில்லை?” என்றார். குரு, “உன் எண்ணங்களில் அவர் இருக்கிறார். ஆனால் உன் எண்ணம், உலக விஷயங்களில் சூழ்ந்திருப்பதால் அவரை உணரமுடியவில்லை ” என்று சொன்னவர், வெவ்வேறு வழிகளில் முயற்சித்தும் சீடனுக்கு அதைப் புரியவைக்க முடியவில்லை. பின்னர் சீடரிடம், “ஹரித்வாருக்குச் செல். கங்கை நதியில் அபூர்வ வண்ணத்தில் ஒரு மீன் இருக்கிறது. மனிதர்கள் போலவே பேசும் ஆற்றல் அதற்கு இருப்பதால் உன் கேள்விகளுக்கு பதில் கிடைக்கும் ” என்றார்.

குருவிடம் ஆசிபெற்று உடனடியாக ஹரித்வாருக்குப் புறப்பட்டார் சீடர். அபூர்வமான மீனின் வருகைக்காக கங்கைக் கரையோரத்தில் காத்துக்கொண்டிருந்தார். சிறிது நேரத்திற்குப் பிறகு அங்கு வந்த மீன், “எதற்காக வந்திருக்கிறாய்?” என்று கேட்டது. “உன்னிடமிருந்து கடவுளைப் பற்றித்தெரிந்து கொள்ள என் குரு அனுப்பி வைத்தார் ” என்று கூறினார். “எனக்கு ஏழு நாட்களாக ஒரே தாகம். எங்கு தண்ணீர் கிடைக்கும்?” என்று கேட்டது மீன். சற்று எரிச்சலடைந்த சீடர், “ பைத்தியக்கார மீனே! உன்னைச் சுற்றி எல்லாப் பக்கங்களிலும் தண்ணீர்தானே!” என்றார். உடனே மீன் கொஞ்சம் கடுமையாக, “நீ தேடிக்கொண்டிருக்கும் கடவுளும் அப்படித்தான், எல்லா பக்கங்களிலும் இருக்கிறார் ” என்று கூறியது. அதைக் கேட்டுத் திருப்தி அடைந்த போதிலும், ஒரு சந்தேகத்தை முன் வைத்தார். “அப்படியானால் கடவுளை உணர முடியாமல் ஏன் இப்படித் தவிக்கின்றேன்?”

“இதே கேள்விதான் எனக்கும், தண்ணீரால் சூழ்ந்திருக்கும் எனக்கு ஏன் தாகம் தணியவில்லை என்பதுதான்.” மீன் நேராக மேலே பார்த்துக்கொண்டு நீந்தினால், தண்ணீர் வாய்க்குள் செல்ல வாய்ப்பே இல்லை என்பதை உணர்ந்த சீடன், தாகத்தைத் தணித்துக் கொள்ள தலைகீழாக நீந்தச் சொன்னான். உடனே மீன், “என் தாகத்தைத் தணிக்க திசை திரும்பி நான் நீந்துவதைப் போல் கடவுளை உணர நீங்கள் முயற்சி செய்ய வேண்டும். ஆசைகளை திசைதிருப்பி கடவுளின் மேல் செலுத்த வேண்டும். உலக விஷயங்கள் மேல் இருக்கும் எண்ணங்களாக கடவுள் மேலே திருப்பினால் கடவுளைப் பார்க்கலாம். இப்போது சீடன் உண்மையை உணர்ந்துகொண்டான்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar