Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> பத்திரகாளியம்மன் திருத்தாலாட்டு
பத்திரகாளியம்மன் திருத்தாலாட்டு
பத்திரகாளியம்மன் திருத்தாலாட்டு

(பழ.தரும.ஆறுமுகம் (பெரிய தோட்டம்) அவர்கள் இயற்றியது
சிரவணம்பட்டி)

1. அப்பம் அவல்விரும்பும் ஆனை முகன் அடியார்
ஒப்பரிய நலம்சேர் உளமென் உயர்தொட்டில்
இப்போ துனக்காக இங்கே விடுதந்தார்
செப்பரிய செல்வியே தாலேலோ
சிரவையூர் நாயகியே தாலேலோ.

2. இலகு தமிழ் இறையாம் எம்முருகன் தன்அடியார்
அலகில் மனமென்னும் அணிசேர் மணித்தொட்டில்
திலகநுதலா யுனக்குத் தேர்ந்து விடுதந்தார்
உலகு கொருதாயே தாலேலோ
உயர்சிரவை நாயகியே தாலேலோ.

3. தண்டாயுதபாணிச் சாமி அடியார்கள்
நண்பார் மனமென்னும் நலஞ்சேர் நற்தொட்டில்
பண்பாய் அமைத்துப் பாங்காய் விடுதந்தார்
விண்ணோர் பணிதேவீ தாலேலோ
வியன்சிரவை நாயகியே தாலேலோ

4. குன்றமாம் ரத்னகிரிக் குமரன் அடியார்கள்
பொன்றா மனமென்னும் புகழ்சேர் பூந்தொட்டில்
இன்றைக் கணிபூட்டி எழிலாய் விடுதந்தார்
என்றைக்கும் தாயேநீ தாலேலோ
எம்சிரவை நாயகியே தாலேலோ.

5. பொடியார் திருமேனிப் பொன்னம்பல வாணன்
அடியார் மனமென்னும் அன்புத் திருத்தொட்டில்
வடிவாம் பிகையுனக்கே வகையாய் விடுதந்தார்
முடியா முதலே தாலேலோ
முதற்சிரவை நாயகியே தாலேலோ

6. திருமண் அணிநெற்றித் திருமால் அடியார்கள்
இருகண் நிறைவாக இலங்கும் எழில்தொட்டில்
பெருகும் மனத்தொடு பெய்து விடுதந்தார்
உருகும் மனத்துமையே தாலேலோ
ஒண்சிரவை நாயகியே தாலேலோ

7. வெள்ளைக் கமலத்தாய் விரவும் அடியார்கள்
தெள்ளத்தெளியப் பாத்தொடுத்த செழுந்தொட்டில்
உள்ளத்தால் ஆக்கி உனக்கே விடுதந்தார்
ஒள்ளியசீர்க் காளியம்மை தாலேலோ
ஒளிர்சிரவை நாயகியே தாலேலோ.

8. செல்வத்திருமடந்தை சீரார் அடியார்கள்
நல்ல மனமென்னும் நயஞ்சேர் நறுந்தொட்டில்
வல்லி உனக்கே வகையாய் விடுதந்தார்
எல்லையில் கருணையாய் தாலேலோ
எழிற்சிரவை நாயகியே தாலேலோ.

9. வில்லார் நுதல்வீர மாச்சி அடியார்கள்
வெல்லும் மனமென்னும் விரைசேர் மலர்த்தொட்டில்
மல்லிகையாற்கட்டி மகிழ்ந்து விடுதந்தார்
தில்லை நடத் தாய் தாலேலோ
திருச்சிரவை நாயகியே தாலேலோ

10. வடகிழக்குத் திக்கில் வளர் மாரித் தாயடியார்
திடஞ்சேர் மனமென்னும் சீரார் பணித்தொட்டில்
படமார் அணிபூட்டிப் பாங்காய் விடுதந்தார்
அடல்மிகும் எம்தாயே தாலேலோ
அணிச்சிரவை நாயகியே தாலேலோ.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar