Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு கருப்பண்ணசாமி திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
  English Version
அருள்மிகு கருப்பண்ணசாமி திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: கருப்பண்ணசாமி
  தல விருட்சம்: வெள்ளை வேலாமரம்
  ஊர்: பொய்யேரிக்கரை
  மாவட்டம்: ஈரோடு
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதத்தில் வருடாந்திர பொங்கல் திருவிழா இரண்டு நாட்கள் கொண்டாடப்படுகிறது. முதல் நாள் காவிரி ஆற்றுக்கு சென்று தீர்த்தம் எடுத்து வந்து சுவாமிக்கு அபிஷேகம் செய்வித்து, இரண்டாம் நாள் பொங்கல் திருவிழா கொண்டாடப்படுகிறது. வெள்ளிதோறும் உச்சிகால பூஜை செய்யும் போது பக்தர்கள் அதிகமாக கலந்து கொண்டு வழிபட்டு சுவாமி அருள் பெறுகின்றனர்.  
     
 தல சிறப்பு:
     
  கருப்பண்ணசாமி வீராவேசத்துடனும், கன்னிமார் தெய்வங்கள் அமைதியாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளன. முருகன் சன்னதியில் இருந்து கீழே இறங்கி, வடக்கு புறவாசல் வழியாக வெளியே சென்றால் கோயிலை வலம் வந்தது போல உள்ள அமைப்பை பெற்றிருப்பது இதன் சிறப்பாகும்.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு கருப்பண்ணசாமி திருக்கோயில், பொய்யேரிக்கரை- 638001, ஈரோடு மாவட்டம்.  
   
போன்:
   
  +91-424-221 4421 
    
 பொது தகவல்:
     
 

தினசரி காலை, உச்சிகாலம், மாலை ஆக மூன்று கால பூஜை நடக்கிறது. இங்கு பண்டார இனத்தை சேர்ந்தவர்கள் வழி வழியாக முறையாக பூஜை செய்து வருகின்றனர்.


 
     
 
பிரார்த்தனை
    
  திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க இறைவனை பிரார்த்திக்கலாம். 
    
நேர்த்திக்கடன்:
    
  பிரார்த்தனை நிறைவேறியதும் சுவாமிக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம். 
    
 தலபெருமை:
     
  கோயிலின் வடக்கு பக்கமாக சென்றால் அரசமரம், வேப்பமரம் இரண்டுக்கும் முன்பகுதியில் விநாயகர், நாகர் சிலைகள் உள்ளன. தெற்கு பக்கத்தில் புற்றுமாரியம்மன் கோயில் உள்ளது. அதன் பக்கத்தில் உள்ள புற்றுக்கண்ணை வழிபட்டு மேற்கு நோக்கி மண் பாதையில் சென்றால் இரும்புகளால் ஆன வேல்கள் பூமியில் பதிக்கப்பட்டுள்ளன. இதற்கு முன் பகுதியில் தூரி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

தூரியின் இடது புறம் இரண்டு குதிரைகள் சுதையும், இரண்டு முனியப்பசுவாமி சுதையும் வேலைபாடுகளுடன் அமைக்கப்பட்டிருக்கின்றன. ஒரு மேடான பகுதியில் மூலஸ்தான கருப்பண்ணசாமி மற்றும் கன்னிமார் தெய்வங்கள் சன்னதி உள்ளது. கருப்பண்ணசாமி மூர்த்தம் வீராவேசத்துடனும், கன்னிமார் தெய்வங்கள் அமைதியாகவும் ஒரே கல்லில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதற்கு வடக்கில் மர நிழலில் சர்ப்ப தேவதை மூர்த்தங்கள் உள்ளன. சிறிது தூரம் சென்றால் கிழக்கு பார்த்த விநாயகர் சன்னதி உள்ளது. இதனை வலம் வந்தால் பசுமையான மரங்களின் நடுவில் முருகன் சன்னதியை காணலாம். முருகன் சன்னதியில் இருந்து கீழே இறங்கி, வடக்கு புறவாசல் வழியாக வெளியே சென்றால் கோயிலை வலம் வந்தது போல உள்ள அமைப்பை பெற்றிருப்பது இதன் சிறப்பாகும்.
 
     
  தல வரலாறு:
     
  ஈரோடு நகரின் காவல் தெய்வமாக விளங்குவது பொய்யேரிக்கரை கருப்பண்ணசாமி. ஈரோடு பெரியார் நகரில் இவருக்கு கோயில் எழுப்பப்பட்டுள்ளது. கிழக்கு நோக்கி 1.5 ஏக்கர் நிலப்பரப்பில் உயரமான திட்டில் அமைந்துள்ளது. மூவாயிரம் ஆண்டு தொன்மை கொண்ட ஈரோடு நகரம் மாபெரும் மன்னர்கள் கோட்டை கட்டி கொற்றம் செலுத்திய ஊர்.ஈரோடை ஆண்ட கலியுக மன்னர் காலத்தில் பெரிய ஏரி அமைத்து நீரை தேக்கி வைத்தனர். விவசாயிகள் மதகு வழியாக நீரை பயன்படுத்தி வந்தனர்.

பின்னர் வேளாளர்கள் ஏரியை பாதுகாக்க வேண்டி ஏரிக்கரையில் கருப்பண்ணசாமி, கன்னிமார், மகாமுனி மற்றும் பல மூர்த்திகளை ஏற்படுத்தி தங்கள் குலதெய்வங்களாக வழிபட்டு வந்தனர். நாளடைவில் இந்த ஏரியானது பொய்யேரிக்கரை என்று எல்லோராலும் அழைக்கப்பட்டது. இத்திருக்கோயிலில் தல விருட்சமான வெள்ளை வேலாமரம் கருப்பண்ணசாமி மற்றும் கன்னிமார் தெய்வங்களுக்கு பின்னால் உயரமான திட்டில் இருக்கிறது.
 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: கருப்பண்ணசாமி வீராவேசத்துடனும், கன்னிமார் தெய்வங்கள் அமைதியாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளன. முருகன் சன்னதியில் இருந்து கீழே இறங்கி, வடக்கு புறவாசல் வழியாக வெளியே சென்றால் கோயிலை வலம் வந்தது போல உள்ள அமைப்பை பெற்றிருப்பது இதன் சிறப்பாகும்.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar