Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு பரசுராமர் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
அருள்மிகு பரசுராமர் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: பரசுராமர்
  உற்சவர்: பரசுராமர்
  தீர்த்தம்: வசிஷ்தி நதி
  ஊர்: ரத்தினகிரி
  மாநிலம்: மகாராஷ்டிரா
 
 திருவிழா:
     
  பரசுராமர் ஜெயந்தி, ஜென்மாஷ்டமி, ஸ்ரீராமநவமி  
     
 தல சிறப்பு:
     
  லாப முத்திரையுடன் வீற்றிருக்கும் இவரை தரிசித்தால் தொழிலில் லாபம் பெருகும்.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 6:00 – இரவு 9:00 மணி 
   
முகவரி:
   
  பரசுராமர் கோயில், ரத்தினகிரி , மகாராஷ்டிரா  
   
போன்:
   
  +91 077740 – 21100 
    
 பொது தகவல்:
     
 
மகாராஷ்டிரா மாநிலம் ரத்தினகிரி அருகிலுள்ள சிப்லன் குன்றின் மீது மகாவிஷ்ணுவின் அவதாரமான பரசுராமர் கோயில் உள்ளது. லாப முத்திரையுடன் வீற்றிருக்கும் இவரை தரிசித்தால் தொழிலில் லாபம் பெருகும். கொங்கன் இனத்தவர்கள் இத்தலத்தை ‘பரசுராம் பூமி’  என்கின்றனர்.

வலம்புரி விநாயகர், ஹனுமன், கங்காதேவி சன்னதிகள் உள்ளன. விருப்பம் நிறைவேற பரசுராமரின் தாயான ரேணுகா தேவிக்கு வளையல் காணிக்கை செலுத்துகின்றனர். கோயிலுக்குள் ‘பரசுராம் பான கங்கா’ என்னும் குளம் உள்ளது. இதனை பரசுராமர் தன் வில்லால் உருவாக்கியுள்ளார். பாவத்தில் இருந்து விடுபட இதன் நீரை பக்தர்கள் தலையில் தெளிக்கின்றனர். மும்பையிலிருந்து பேருந்து வசதி உள்ளது
 
     
 
 தலபெருமை:
     
  இது எங்கும் காணமுடியாத அரிய தரிசனம். கைகளில் வில், அம்பு, கோடரியை ஏந்தியபடி ‘லாப முத்திரை’ காட்டியபடி பரசுராமர் உள்ளார். பிரம்மா, விஷ்ணுவும் நான்கு கைகளில் ஆயுதங்கள் ஏந்தியுள்ளனர்.  மராட்டிய மன்னர் வீரசிவாஜி இங்கு அடிக்கடி தரிசனம் செய்துள்ளார். கோயிலுக்கு அருகில் வசிஷ்தி நதி ஒடுகிறது. படகு சவாரியும் இதிலுண்டு. குன்றில் இருந்து காண்போரின் கண்களுக்கு நதி இனிமை சேர்க்கிறது.
 
     
  தல வரலாறு:
     
  மேய்ச்சல் நிலமான இப்பகுதியில் புதர் ஒன்றில் பசு ஒன்று தினமும் பால் சுரந்து வந்தது. பக்தர் ஒருவரின் கனவில் தோன்றிய பரசுராமர் குறிப்பிட்ட இடத்தில் சுயம்பு வடிவில் தான் புதைந்திருப்பதாக தெரிவித்தார். இதன் பின் இங்கு சுவாமி சிலையை பிரதிஷ்டை செய்தனர். குன்றின் மீது கட்டப்பட்ட கற்கோயில் இது. படிகள் மீதேறியே கோயிலுக்கு செல்ல வேண்டும். 18ம் நுாற்றாண்டில் வாழ்ந்த பிரம்மேந்திர சுவாமிகள் திருப்பணி செய்து கோயிலை புதுப்பித்தார். மூலவர் பரசுராமருடன் பிரம்மா, விஷ்ணுவும் கருவறையில் நின்ற கோலத்தில் உள்ளனர்.
 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: லாப முத்திரையுடன் வீற்றிருக்கும் இவரை தரிசித்தால் தொழிலில் லாபம் பெருகும்.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar