Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு ஐயப்பன் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
அருள்மிகு ஐயப்பன் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: ஐயப்பன்
  உற்சவர்: ஐயப்பன்
  ஆகமம்/பூஜை : தமிழ் ஆகமத்தின்படி பூஜை
  புராண பெயர்: இடையர்பாளையம்
  ஊர்: குனியமுத்தூர்
  மாவட்டம்: கோயம்புத்தூர்
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  ஆடிவெள்ளி, புரட்டாசி மாத நவராத்திரி, கார்த்திகை மாத சபரிமலை ரதயாத்திரை போன்ற திருவிழாக்கள் கொண்டாடப்படுகின்றன.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 5.30 மணி முதல் 10.00 மணி வரை, மாலை 5.30 மணி முதல் இரவு 8.00 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு ஐயப்பன் திருக்கோயில், மணிகண்டன் நகர், இடையர்பாளையம், குனியமுத்தூர், கோயம்புத்தூர்-641 108.  
   
போன்:
   
  +91 82202 36779, 94430 91917 
    
 பொது தகவல்:
     
  கோயில் கிழக்கு முகம் பார்த்து உள்ளது. ஐயப்பன் கிழக்கு பார்த்து உள்ளார். மகாகணபதி கிழக்கு பார்த்தும், காசி விஸ்வநாத விசாலாட்சி கிழக்கு பார்த்தும், முருகன் வள்ளி, தெய்வானை கிழக்கு பார்த்து, லட்சுமி நாராயண மகாலட்சுமி கிழக்கு பார்த்தும், துர்க்கை வடக்கு பார்த்தும், செல்வ கணபதி வடக்கு பார்த்தும், மாரியம்மன் பொறவியம்மன், ஆதிபொரவியம்மன் வடக்கு பார்த்து, ஆஞ்சநேயர், உற்சவ மூர்த்தி ஐயப்பன் கிழக்கு பார்த்து, தட்சிணாமூர்த்தி தெற்கு பார்த்து, பைரவர் தெற்கு பார்த்தும், நவகிரக பஜனை மண்டபம் உள்ளது.  
     
 
பிரார்த்தனை
    
  திருமணத்தடை, குழந்தைபாக்கியம், உத்தியோகம் கிடைக்க இங்கு பிரார்த்திக்கின்றனர்.
 
    
நேர்த்திக்கடன்:
    
  முருகனுக்கு 12 வாரம் பூஜை செய்தால் கல்யாணம் நடக்கும், திருமணம் நடந்தவுடன் முருகனுக்கு தாலி செய்து தருகின்றனர். துர்கை அம்மனுக்கு வெள்ளி, செவ்வாய் ராகு காலம் பூஜை செய்தால் கல்யாணம் மற்றும் குழந்தை பெறும், ஐயப்பனுக்கு சனிக்கிழமை நெய் அபிஷேகம் செய்தால் உத்தியோகம் பணி கிடைக்கும். ஆஞ்சநேயருக்கு வடமாலை மற்றும் வெற்றிலை மாலை செலுத்தினால் கல்யாண காரியம் நிவர்த்தியாகும். 
    
  தல வரலாறு:
     
  பல முன்னோர்கள் இதே இடத்தில் மாரியம்மன் மற்றும் பொறவியம்மன் வைத்து பூஜை செய்து வந்தனர். கடந்த 32 ஆண்டுகளுக்கு முன்பு இந்த இடத்தில் லே-அவுட் செய்து மணிகண்டநகர் வந்தது. அதிலிருந்து ஐயப்பன் போட்டோ வைத்து பூஜை மற்றும் சபரிமலை செல்லும் பக்தர்கள் வீட்டில் பூஜை செய்தனர். 1986 மாரியம்மனுக்கு முதல் கும்பாபிஷேகம், பிறகு 2002 பரிவார தெய்வங்கள் சன்னிதி அமைத்து மூன்றாம் கும்பாபிஷேகம் நடந்தது. பிறகு 22.8.16 அன்று நான்காவது கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. கடந்த 50 வருடங்களாக சபரிமலை யாத்திரை நடக்கிறது. 1986ம் ஆண்டு கோயில் கட்டப்பட்டது.  
     
சிறப்பம்சம்:
     
   
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar