Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: மாரியம்மன், செல்வவிநாயகர்
  உற்சவர்: மாரியம்மன்
  அம்மன்/தாயார்: மாரியம்மன்
  தல விருட்சம்: வன்னி
  ஆகமம்/பூஜை : வேத ஆகமம்
  புராண பெயர்: நல்லாம்பாளையம்
  ஊர்: நல்லாம்பாளையம்
  மாவட்டம்: கோயம்புத்தூர்
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  விநாயகர் சதுர்த்தி, மாரியம்மன் திருக்கல்யாண உற்சவம், சிவாரத்திரி இங்கு சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 7 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு மாரியம்மன் , செல்வவிநாயகர் திருக்கோயில், அன்னையப்ப கவுண்டர் வீதி, கங்கனூர் கிராமம், நல்லாம்பாளையம், கோயம்புத்தூர்-641006.  
   
போன்:
   
  +91 9787138837 
    
 பொது தகவல்:
     
  இக்கோயில் ஓம் என்ற அமைப்பில் அமைந்துள்ளது. இங்கு செல்வவிநாயகர்,  மாரியம்மன், ஆனந்தீஸ்வரர் போன்ற தெய்வங்கள் காட்சி தருகின்றன.  
     
 
பிரார்த்தனை
    
  திருமணத்தடை நீங்கவும், மாற்றுதிறனாளி குழந்தைகள் சரியாக வேண்டும் என்றும் இங்கு பிரார்த்திக்கின்றனர். 
    
நேர்த்திக்கடன்:
    
  பிரார்த்தனைகள் நிறைவேறியதும், பக்தர்கள் மாரியம்மனுக்கு உப்பு வழங்குதல், அங்கபிரதச்சனம் மற்றும் அக்னி சட்டிகள் எடுத்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர். 
    
 தலபெருமை:
     
  குழந்தைகளுக்கு அம்மை வந்தால் கோயிலுக்கு வந்தால் சரியாவதாகவும், திருமணம் நடக்க வேண்டும் என பெண்கள் இங்கு பூஜை செய்து உடனே பலன் கிடைப்பதாகவும், மற்றும் மாற்றுதிறனாளி குழந்தைகள் சரியாக வேண்டும் என அம்மனிடம் பிரார்த்தித்தவுடன் குணமாகின்றன என்று பக்தர்கள் கூறுகின்றனர்.  
     
  தல வரலாறு:
     
  200 ஆண்டுகளுக்கு முன் முன்னோர்கள் மாரியம்மன் கோயில் வைத்தனர். இங்கு வசிக்கும் ஒருவரின் கனவில் கோயில் வைக்க வேண்டும் என வந்ததால் அன்று முதல் மாரியம்மன் சாமியை குடிசைபோட்டு கும்பிட்டு வந்தனர் இன்று வரை பின்பற்றி வருகின்றனர்.  
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: இக்கோயில் ஓம் என்ற அமைப்பில் அமைந்துள்ளது.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar