Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு தேவராஜ மகா சாஸ்தா திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
  English Version
அருள்மிகு தேவராஜ மகா சாஸ்தா திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: தேவராஜ மகா சாஸ்தா
  உற்சவர்: குதிரை மட்டும்
  அம்மன்/தாயார்: பூரண, புஷ்கலா
  தல விருட்சம்: வேம்பு
  தீர்த்தம்: தேவ தீர்த்தம்
  ஆகமம்/பூஜை : காரண ஆகமப்படி பூஜை
  புராண பெயர்: ஆயிக்குடில்
  ஊர்: ஆய்க்குடி
  மாவட்டம்: திருவாரூர்
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  தமிழ்வருடப்பிறப்பு, சித்திரை செவ்வாய் கடைசி பூஜை, பிரதிமாதம் பவுர்ணமி பூஜை ஆகிய விழாக்கள் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன.  
     
 தல சிறப்பு:
     
  வீரன் காவல் தெய்வமாக உள்ளார். வெளிநாடுகளில் வாழும் தமிழர்களின் குலதெய்வமாக விளங்குகிறது.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 8.00 மணி முதல் மதியம் 11.00 மணி வரையும் மாலை 4.00 மணிமுதல் இரவு 6.00 மணிவரை திறந்திருக்கும்.  
   
முகவரி:
   
  அருள்மிகு தேவராஜ மகா சாஸ்தா திருக்கோயில், முகுந்தனுõர் அஞ்சல், குடவாசல் தாலுகா, ஆய்க்குடி, திருவாரூர் - 61370.  
   
போன்:
   
  +91 94884 15137, 94439 46137 
    
 பொது தகவல்:
     
  மேற்கு பக்கம் வாயிலில், எதிரில் தீர்த்தக்குளம், மூலவர் தனி விமானம் மூன்று கலசம், வடக்குப் பக்கம் பெத்தாரணசுவாமி மற்றும் பேச்சியம்மன் அருள்பாலிக்கின்றனர். தெற்கு பக்கம் ராக்கப்பெருமாள் அவரை நோக்கி அஸ்வராஜன் தனியாகவும் அருள்பாலிக்கின்றனர். மூலவர் பூரண புஷ்கலாவுடன் தேவராஜா சாஸ்தா மேற்கு பக்கம் பார்த்த வகையில் அருள்பாலிக்கிறார். பலி பீடம் யானையும் கிழக்குப் பக்கத்திலும், உத்தராண்டராயர் வடக்கு பக்கமும் அருள்பாலிக்கின்றனர். நடுவில் தல விருட்சம்.

வீரன் வெளிப்பகுதியில் கிழக்கு நோக்கியும், பெத்தனாநாத சுவாமி, கணநாதர், இருளன், சதி மற்றும் பதியுடனும், பேச்சியம்மன் தெற்கு பக்கமும் பார்த்த வகையில் அருள்பாலிக்கின்றனர். ராகவப்பெருமாள், அஸ்வத்ராஜன் மேற்குப் பக்கமும், தூண்டில்காரன் வடக்கு நோக்கியும், அஸ்வராஜன் மேற்கு நோக்கியும், வழிக்கறையான் கிழக்கு நோக்கியும் அருள்பாலிக்கின்றனர். மூன்று வகையான மகா மண் டபத்தில் ஆயிரம் பேர் அமர்ந்து சுவாமி தரிசனம் செய்யும் வகையில் இடவசதியில் கோயில் அமைக்கப்பட்டுள்ளது. 500 முதல் ஆயிரம் ஆண்டுகள் முற்பட்டதாக கூறப்படுகிறது. 2011ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்துள்ளது.
 
     
 
பிரார்த்தனை
    
  பிரதி மாதம் பவுர்ணமி பூஜை செய்தல், பில்லி, சூனியம் முற்பட்ட பகைகள் மற்றும் தோஷங்கள் நிவர்த்திக்கு பிரார்த்தனை செய்யப்படுகிறது. மேலும் சித்திரை மாத பூஜை, சகல ஐஸ்வர்யங்கள் கிடைக்கும் என்பது ஐதீகம். 
    
நேர்த்திக்கடன்:
    
  வேண்டுதல் நிறைவேறியவர்கள், புதிய தானியங்கள் மற்றும் உயிருடன், ஆடு, மாடு,கோழி மற்றும் புறா ஆகியவை காணிக்கையாக செலுத்துகின்றனர். 
    
 தலபெருமை:
     
  வயல் சூழ்ந்தபகுதியில் கோயில் உள்ளது. பல்வேறு இந்திய வம்சா வழியினர்கள் பிரான்ஸ், லண்டன் உள்ளிட்ட வெளிநாடு வாழ் தமிழ் மக்களின் குலதெய்வாக உள்ளதால் பலரும் முக்கிய நிகழ்ச்சிகளுக்கு வந்து செல்கின்றனர். இக்கோயிலை சுற்றி நான்கு திசைகள் மற்றும் அருகில் பழமை வாய்ந்த கயிலாசநாதர் மற்றும் வலம்புரி விநாயகர் கோயில் இருப்பது இக்கோயிலுக்கு மேலும் சிறப்பு சேர்க்கிறது.

 
     
  தல வரலாறு:
     
  சோழ வளநாட்டின் சைவ சமயத்தின் தலைமை பீடமான திருவாரூக்கும் மேற்கே 13  கி.மீ. தொலைவில்  இக்கிராமம் அமைந்துள்ளது. ஆயிரம் ஆண்டுகள் பழமையானதாக கூறப்படுகிறது. வயல் சூழ்ந்த பகுதியில் காவல் தெய்வமாக விளங்குகிறது. 48 விதமான துர்தேவதைகள் இக்கோயிலில் சாஸ்தாவை பூஜித்து சாப, பாவ விமோசனங்களை ஏற்றுள்ளனர். பிரம்மா, ருத்திரன் உள்ளிட்ட தேவர்கள் பூஜை செய்ததால் இக்கோயில் மூலவருக்கு தேவராஜா சுவாமி (தெய்வரங்கப்பெருமான்) எனப்பெயர் வந்துள்ளது. இப்பகுதியில் இருந்து வெளிநாடு, வெளி மாநிலங்களில் குடி பெயர்ந்துள்ள பக்தர்கள் முக்கிய விசேஷ தினங்களில் இங்கு வந்து வழிபாடு நடத்தி வருகின்றனர். தற்போது இந்து சமய அறநிலைத்துறைக்கட்டுப்பாட்டில் இருந்தாலும் குல தெய்வ வழிபாடு நடத்துபவர்கள் நன்கொடை மூலம் கோயில் கட்டப்பட் டுள்ளது குறிப்பிடத்தக்கது.  
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: வீரன் காவல் தெய்வமாக உள்ளார். வெளிநாடுகளில் வாழும் தமிழர்களின் குலதெய்வமாக விளங்குகிறது.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar