Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு சீனிவாச பெருமாள் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
  English Version
அருள்மிகு சீனிவாச பெருமாள் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: சீனிவாச பெருமாள்
  அம்மன்/தாயார்: ஸ்ரீதேவி பூமாதேவி
  தல விருட்சம்: ஆலமரம்
  ஆகமம்/பூஜை : வைஸ்ணவம்
  புராண பெயர்: ரங்கநாதபுரம் (கரட்டுப்பட்டி)
  ஊர்: ரங்கநாதபுரம்
  மாவட்டம்: திண்டுக்கல்
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  புரட்டாசி சனிதோறும், கிருஷ்ண ஜெயந்தி, மாதந்தோறும் பௌர்ணமி கிரிவலம், புரட்டாசி சனி (4வது) சுவாமி புறப்பாடு உண்டு.  
     
 தல சிறப்பு:
     
  ஸ்ரீபகவான் சித்தரின் ஜீவசமாதியும், 14 அடி உயர ஆஞ்சநேயரும் சிறப்பு.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 7.30 மணி முதல் 11.30 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.  
   
முகவரி:
   
  அருள்மிகு ஸ்ரீதேவி பூதேவி சமேத சீனிவாச பெருமாள் திருக்கோயில், ரங்கநாதபுரம், செட்டிநாயக்கன்பட்டி 624004 திண்டுக்கல்.  
   
போன்:
   
  +91 -98650-08856, 89257 14224, 99254-66667 
    
 பொது தகவல்:
     
  திண்டுக்கலில் இருந்து 6கி.மீ. தொலைவில் உள்ள ரங்கநாதபுர மலையில் கோயில் அமைந்துள்ளது. 175 படிக்கட்டுகள் உள்ளன. மலைக்கோயில் வரை  கார், பஸ் செல்ல வழியுண்டு. கோயிலின் முன்புறம் ஆஞ்சநேயர் கோயிலும், அதன்பின் விநாயகர் கோயிலும், அருகே சனீஸ்வரர் கோயிலும், அதனையடுத்து  பெருமாள் சன்னிதி உண்டு. சுற்றிலும் மரங்கள், உள்ளன.  
     
 
பிரார்த்தனை
    
  திருமண தடை நீங்குதல், குழந்தை பாக்கியம், வேலை வாய்ப்பு கிடைத்தல் 
    
நேர்த்திக்கடன்:
    
  துலாபாரம் இத்தலத்து முக்கிய நேர்த்திகடன்களாக உள்ளது. 
    
 தலபெருமை:
     
  ஸ்ரீதேவி பூமாதேவி சமேத ஸ்ரீநிவாச பெருமாள் கோயிலில் பசுமையான காட்சி தரும் அரசமரம், நான் அரசனாக இருக்கிறேன் என பகவத் கீதையில் கிருஷ்ணன் கூறுவதை நினைவுகூர்வதாக உள்ளது என்கின்றனர் இப்பகுதி மக்கள். ஸ்ரீபகவான் சித்தர் பீடம், சக்கரத்தாழ்வார் சன்னிதி, சாந்த விநாயகர் இங்குள்ளது.
 
     
  தல வரலாறு:
     
  கி.பி. 1500ல் அச்சுத தேவராயர் காலத்தில் தாடிக்கொம்பில் சவுந்தராஜ பெருமாள் கோயிலும், செட்டிநாயக்கன்பட்டி அருகே கம்பத்துறை என்ற இடத்தில் கம்பம் ஒன்றும், அருகே பெருமாள் கோயில் இருந்ததாக தெரியவந்துள்ளது. அதுமுதல் இப்பகுதி மக்கள் வழிபட்டு வந்துள்ளனர். திண்டுக்கல் அருகே மலைமேல் பெருமாள் கோயில் உள்ளது தனிச்சிறப்பு.  
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: ஸ்ரீபகவான் சித்தரின் ஜீவசமாதியும், 14 அடி உயர ஆஞ்சநேயரும் சிறப்பு.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar