Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு யோகநரசிம்மர் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
  English Version
அருள்மிகு யோகநரசிம்மர் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: யோகநரசிம்மர்
  அம்மன்/தாயார்: அமிர்தவல்லி
  தீர்த்தம்: லக்ஷ்மி சரஸ்
  ஊர்: சோகத்தூர்
  மாவட்டம்: திருவண்ணாமலை
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  நரசிம்ம ஜெயந்தி, புரட்டாசி சனிக்கிழமை, வைகுண்ட ஏகாதசி, அனுமன் ஜெயந்தி  
     
 தல சிறப்பு:
     
  யோக நரசிம்மர், சாந்த நரசிம்மராக அருள்பாலிப்பது சிறப்பு.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 8 மணி முதல் மணி 11 வரை, மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு யோக நரசிம்மர் திருக்கோயில் சோகத்தூர், திருவண்ணாமலை.  
   
 
பிரார்த்தனை
    
  திருமணத்தடை நீங்க, வியாபாரத்தில் மேன்மை அடைய, தோஷங்கள் விலக, பிரார்த்தனைகள் நிறைவேற இங்கு வழிபட்டுச் செல்கின்றனர். 
    
நேர்த்திக்கடன்:
    
  இங்குள்ள அம்பாளுக்கு புடவை சாற்றியும், அனுமனுக்கு வெற்றிலை மாலை அல்லது வடை மாலை சாற்றியும் நேர்த்திகடன் செலுத்துகின்றனர். 
    
 தலபெருமை:
     
  இங்குள்ள நரசிம்மர் கிழக்கு நோக்கியபடி காட்சி தருகிறார். தன் உக்கிரத்தையெல்லாம் விட்டுவிட்டு, தன்னை நாடி வரும் பக்தர்களின் வேண்டுதல்களை, பிரார்த்தனைகளை நிறைவேற்றித் தருகிறார். திருமணத் தடையால் கலங்குவோர் இங்கு வந்து அமிர்தவல்லித் தாயாருக்கு புடவை சார்த்தி வேண்டிக் கொண்டால் திருமணத்தடைகள் நீங்கி, விரைவில் நல்ல வரன் அமையும் என்பது ஐதீகம்! இந்தத் தலத்தில் உள்ள ஆஞ்சநேயரும் விசேஷமானவர். புதன் மற்றும் சனிக்கிழமைகளில் அனுமனுக்கு வெற்றிலை மாலை அல்லது வடை மாலை சார்த்தி 11 முறை வலம் வந்து பிரார்த்தித்தால்... எதிரிகள் தொல்லை ஒழியும். மனதுள் தைரியம் பிறக்கும் என்கின்றனர் பக்தர்கள்! மாதந்தோறும் சுவாதி நட்சத்திர திருநாளில், நரசிம்மருக்கு சிறப்பு அபிஷேகங்கள், அர்ச்சனைகள், பூஜைகள் நடைபெறும். இந்த நாளில் இங்கு வந்து நரசிம்மரை கண்ணாரத் தரிசித்து பிரார்த்தனை செய்தால், வியாபாரத்தில் மேன்மை ஏற்படும். கல்வி-கேள்விகளில் சிறந்து விளங்கலாம். குறிப்பாக சுவாதி நட்சத்திரக்காரர்கள், அந்த நாளில் வந்து வணங்குவது, கூடுதல் பலனைத் தரும்! திருமணத் தடை மற்றும் தோஷங்கள் உள்ளவர்கள். இங்கேயுள்ள லக்ஷ்மிஸரஸ் தீர்த்தக் குளத்தில் நீராடி, நரசிம்ம ஸ்லோகத்தைச் சொல்லி, பானக நைவேத்தியம் செய்து மனமுருகி வழிபட்டால், விரைவில் நல்லது நடக்கும். திருமண வரம் கைகூடும். தோஷங்கள் விலகி, சந்தோஷமும் நிம்மதியும் நிலைத்திருக்கும்!  
     
  தல வரலாறு:
     
  வேதத்தை அசுரர்களிடம் பறிகொடுத்த பிரம்மா, லக்ஷ்மி ஸரஸ் எனும் புண்ணிய தீர்த்தத்தில் நீராடி. மகாவிஷ்ணுவை நோக்கிக் கடும் தவம் இருந்தார். இதையடுத்து அவருக்கு திருக்காட்சி தந்து அருள்பாலித்தார் திருமால். பிரம்மனின் சோகம் போக்கிய திருத்தலம் என்பதால், இந்தத் திருவிடம்.... சோஹாபஹத்ருபம் என அழைக்கப்பட்டது. பிறகு சோகத்தூர் என மருவியதாகச் சொல்கிறது ஸ்தல புராணம்.  
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: யோக நரசிம்மர், சாந்த நரசிம்மராக அருள்பாலிப்பது சிறப்பு.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar