Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு சிவசுப்ரமணிய சுவாமி திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
  English Version
அருள்மிகு சிவசுப்ரமணிய சுவாமி திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: சிவசுப்ரமணிய சுவாமி
  அம்மன்/தாயார்: வள்ளி, தெய்வானை
  ஊர்: குருசாமிபாளையம்
  மாவட்டம்: நாமக்கல்
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  பங்குனி உத்திரம், ஆடிக் கிருத்திகை, வைகாசி விசாகம், மாசி மகம், சித்ரா பவுர்ணமி, திருக்கார்த்திகை தீபம்.  
     
 தல சிறப்பு:
     
  இங்கு சிவசுப்ரமணியசுவாமி, பாலதண்டாயுதபாணி என இரண்டு மூலவர் இருப்பது இத்தலத்தின் தனி சிறப்பு.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு சிவசுப்ரமணியசுவாமி திருக்கோயில் குருசாமிபாளையம், நாமக்கல்.  
   
    
 பொது தகவல்:
     
  இங்கு ஏகாம்பரேஸ்வரர், வல்லப கணபதி, துர்கை, சனீஸ்வரர் ஆகியோர் அருள்பாலிக்கின்றனர்.  
     
 
பிரார்த்தனை
    
  ஒன்பது வெள்ளிக்கிழமை அல்லது செவ்வாய்க்கிழமைகளில், இங்கு வந்து நெய்தீபமேற்றி, சிவசுப்ரமணியரை வழிபட்டால், செவ்வாய் தோஷம் நீங்கும்; திருமண பாக்கியம் கைகூடும்; வயிறு சம்பந்தமான பிரச்சனைகள் யாவும் விலகும் என நம்புகின்றனர் பக்தர்கள். 
    
நேர்த்திக்கடன்:
    
  இங்கு வந்து பொங்கலிட்டும், அன்னதானம் செய்தும், நேர்த்திகடன் செலுத்துகின்றனர். 
    
 தலபெருமை:
     
  இந்தத் தலத்தில், சிவசுப்ரமணிய ஸ்வாமி மற்றும்  பாலதண்டாயுதபாணி என இரண்டு முருகப்பெருமான்களை தரிசிக்கலாம். பங்குனி உத்திரத்தின் போது, முருகப் பெருமானுக்குத் திருக்கல்யாண வைபவம் நடைபெறும். அப்போது, தங்கள் கையால் மாலை தொடுத்து, சுவாமிக்கு சார்த்தி வழிபட... விரைவில் கல்யாண மாலை நிச்சயம் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இங்கு வந்து பொங்கலிட்டு, அன்னதானம் செய்து வழிபட்டால் அந்த வருடம் விளைச்சல் அமோகமாக இருக்கும்; சந்ததி செழிக்கும் என்பது ஐதீகம்.  
     
  தல வரலாறு:
     
  முருகக் கடவுளின் படை வீரர்களின் தளபதியாகத் திகழ்ந்த வீரபாகு. இங்கே பாலதண்டாயுதபாணியின் திருவிக்கிரகத்தை வைத்து, மனமுருகி வழிபட்டார்; இதில் மகிழ்ந்த முருகப்பெருமான், அவருக்கு இங்கு திருக்காட்சி தந்தார் என்றும் தெரிவிக்கிறது ஸ்தல புராணம். பிறகு, வீரபாகுவின் வம்சத்தவர்கள், முருகப்பெருமான் தரிசனம் தந்த இடத்தில் சிறியதொரு கோயிலை அமைத்து வழிபடத் துவங்கினர்.  
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: இங்கு சிவசுப்ரமணியசுவாமி, பாலதண்டாயுதபாணி என இரண்டு மூலவர் இருப்பது இத்தலத்தின் தனி சிறப்பு.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar